districts

img

அங்கன்வாடி மையம் அருகே தேங்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம்

திருப்பூர், செப்.2- திருப்பூர் மாநகரில், வார்டு எண் 30  மேட்டுபாளையம் பேருந்து நிறுத்தம்  காமராஜர் நகர் பகுதியில் அங்கன்வாடி  மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அரு கிலேயே குப்பைகள் கொட்டப்படுவ தால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.   இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், காமராஜ் நகர் பகுதியில் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகி றோம். இச்சாலையில் தினசரி பல்லாயி ரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்ற னர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலை யம் மற்றும் அங்கன்வாடி மையம் ஆகி யவையும் அருகிலேயே உள்ளன.  இப்பகுதியில் மாநகராட்சி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. குப்பை தொட்டிகளில் உள்ள குப்பை களை விட சாலையில் உள்ள குப்பை தான் அதிகமாக உள்ளது. இதனால் இங் குள்ள அங்கன்வாடிக்கு வரும் குழந்தை களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையத் திற்கு வரும் நோயாளிகளுக்கும், நோய் தொற்று ஏற்பட வாய்ப் புள்ளது. இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க சென்றால், உங்கள்  பகுதி கவுன்சிலரிடம் கூறிவிட்டு இங்கு வாருங்கள் என்று கூறுகிறார்கள். கவுன் சிலரிடம் இதுகுறித்து பலமுறை தெரி வித்தும். எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல் உள்ளது. அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கும், மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளுக்கும், இச்சாலையை பயன்படுத்தும் ஆயிரக் கணக்கான மக்களுக்கும் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க குப்பை தொட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற  வேண்டும் என்று கூறினர்.