மாணவிகள் போராட்டம் தருமபுரி, நவ.3- பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டி அரசு மாணவியர் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டியில் அரசு மாண வியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 56 மாணவிகள் தங்கி பள் ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலை யில், விடுதியில் குளிப்பதற்கு முறையான தண்ணீர் வசதி கேட்டும், கழிப்பிட வசதி செய்து தரக்கோரியும், விடுதி முன்பு உள்ள நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா நேரில் சென்று மாணவியரின் குறை களை கேட்டறிந்து, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக மாணவியர்களுக்கு உறு தியளித்தார். அதனையேற்றுக் கொண்ட மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்ற னர்.