நாமக்கல், ஜூலை 9- ஆவின் விற்பனை நிலையத்திற்குள் அதிகாலை நுழைந்து பால் பாக்கெட்டுகளை திருடும் இளை ஞர்களின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. நாமக்கல், பெருமாபாளையம் புதூர் பகுதியில், ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெறப்ப டும் பால் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருபவர் சபாபதி. இவரது விற்பனை நிலையத்தில் அதிகாலை 3 மணியளவில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொண்டு வரப்படும் பால் டப்பாக்கள் இறக்கி வைத்து செல்வது வழக்கம். அவ்வாறு இறக்கி வைக்கும் பால் டப்பாக்க ளில் இருந்து பால் பாக்கெட்டுகள் தொடர்ந்து காணாமல் போய் வந்தது. இதுகுறித்து கூட்டுறவு சங்க ஊழியர்க ளிடம் முறையிட்டுப் பயனில்லாததால், பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனை அடுத்து தனது ஆல்வின் பால் விற்பனையகத்திலிருந்து பால் திருடப்படுவதை கண்காணிக்க சிசிடிவி கேமரா வினை பொருத்தினர். இதன் மூலம் கண்காணிக்க தொடங்கிய பொழுது இரண்டு இளைஞர்கள் வெள்ளை நிற சாக்குப்பையைக் கொண்டு வந்து பால் திருடி செல்லும் காட்சிகள் பதிவானது. இந்த சிசிடிவி காட்சிகளை காவல் நிலையத்தில் கொடுத்து புகார் அளித்தும். எவ்வித நடவடிக்கை இல்லாததால், தற்பொழுது இளைஞர்கள் பால் பாக்கெட் திருடும் சிசிடிவி காட்சிகளை இணையதளத்தில் வெளியிட் டதால், இக்காட்சிகள் தற்போது வைரலாகி வருகி றது.