districts

img

வயநாடு பேரிடர்: ரூ.50 ஆயிரம் அனுப்பிய தீக்கதிர் வாசகர்

திருப்பூர், ஆக.7- வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவும் வகையில், ரூ.50  ஆயிரத்தை நிவாரண உதவிக்கு தீக் கதிர் வாசகர் அனுப்பி வைத்தார் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற் பட்ட பேரிடரில் உயிரிழந்த, பாதிக்கப் பட்ட குடும்பத்தாருக்கு நிவாரணம் அளிக்குமாறு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு அழைப்பு விடுத்தி ருந்தது. இதனை ஏற்று உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டு றவுத் துறை துணைப் பதிவாளரும், தீக்கதிரின் வாசகருமான  எஸ்.கிருஷ்ணன் தனது சேமிப்பு நிதியில் ரூ.50 ஆயிரத்தை  கேரள மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத் தார்.