districts

img

திருக்குறள் வாசிப்பை மக்கள் இயக்கமாக மாற்றிய இளைஞர்

திருப்பூர், பிப்.20- திருப்பூர் புத்தகத் திருவிழாவில், திருக்குறள் வாசிப்பை மக்கள் இயக்க மாக மாற்றி, பன்முகப் பணிகளில் ஈடு பட்டு வரும் தன்னம்பிக்கை இளைஞ ருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின் றன. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் பெயர் கவி உழ வன் (35). திருப்பூர் புத்தகத் திருவிழா வில் பாரத் பப்ளிசர்ஸ் என்ற அரங் கம் அமைத்திருந்தார் அந்த இளைஞர்.  புத்தகக் கண்காட்சி வளாகத்தில், பாரத் பப்ளிசர்ஸ் அரங்கத்தில் மட்டும் பலர் வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்தது. இங்கு திருக்குறள்களை ஒப்புவித்து பரிசு பெற்றுச் சென்றவர் கள் எண்ணிக்கை மட்டும் 1400க்கு  மேல்! பத்து திருக்குறள் ஒப்புவித்த தற்கு ‘வகுப்பறை தலைவன்’ புத்தகம்  வழங்கப்பட்டது. இந்த புத்தகங் களைப் பரிசாகப் பெற்றவர்கள் எண் ணிக்கை 1407 பேர். முப்பது குறள் வாசித் தவர்களுக்கு திருக்குறள் ‘திறவுகோல்’ என்ற புத்தகம் வழங்கப்பட்டது. 55 பேர்  இப்புத்தகத்தைப் பெற்றனர். நூற்றுக் கும் மேற்பட்ட திருக்குறளை ஒப்புவித்த வர்களுக்கு ‘குறளுக்கு குறள்’ என்ற நூல் வழங்கப்பட்டது. ஐந்து பேர் இந்த  நூலைப் பெற்றனர். இது தவிர திருக் குறளைத் திறம்பட கற்றுத் தந்த ஆசிரி யர் ஒருவருக்கு ‘கற்க நிற்க தக’ என்ற புத்தகம் வழங்கப்பட்டது. மொத் தம் ரூ.32 ஆயிரம் மதிப்பில் புத்தகங் கள் வழங்கப்பட்டன. திருக்குறள் பற்றிய இப்புத்தகங் களை எழுதியவரும் கவி உழவன்தான். புத்தக வெளியீட்டுப் பணியில் பங் களிப்பு செலுத்துவதுடன், பல்லடத் தில் டியூசன் சென்டர் நடத்தி வரு கிறார். இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) படித்திருக்கும் கவி உழவன், சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். ஆதரவற்றவர்களுக்கு உத வுவது, பள்ளி, கல்லூரி என கல்வி நிறு வனங்களில் மாணவர்களுக்கு சொற் பொழிவு ஆற்றுகிறார். இதுவரை 2 லட் சம் மாணவர்களிடம் பேசியிருப்ப தாகக் கூறும் கவி உழவன் எழுத்தாள ராக, பேச்சாளராக, புத்தக வெளியீட்டா ளராக, சமூக சேவகராக தனது பன்முக  சேவையைத் தொடர்ந்து வருகிறார்.  இதுகுறித்து, குன்னங்கல்பாளையத் தில் டாப்லைட் நூலகத்தின் நூலகராக  பணியாற்றும் இந்துமதி கூறுகையில், கவி உழவனின் சிந்தனையில் உதித்த திருக்குறள் ஒப்புவித்தல் திட்டத்தைக் கூட்டாகச் செயல்படுத்தினோம், என் றார். புத்தகத் திருவிழாவில் இந்த  புதுமையான திட்டத்தை செயல்படுத்தி யது பற்றி கவி உழவன் கூறுகையில், பொதுவாக சமூகத்தில் வாசிப்புப் பழக் கம் குறைவாக இருக்கிறது. புத்தகத்  திருவிழாவுக்கு வரும் பலர் பொருட் காட்சியைக் காண வருவது போல் வரு கின்றனர். எனவே இவர்களிடம் வாசிப் புப் பழக்கத்தைத் தூண்ட வேண்டும்  என்பதற்காக புதுமையாக முயற்சி  செய்தோம். அதேசமயம் கண் காட்சிக்கு வருவோருக்கு இலவசமா கப் புத்தகங்களை கொடுத்தால் கூட்ட மாக அதை வாங்கிச் செல்வார்கள். ஆனால், புத்தகத்தின் மதிப்புத் தெரி யாதபோது இலவசமாக புத்தகங் களைக் கொடுப்பது பயனளிக்காது. எனவே தான் திருக்குறள்களை ஒப்பு வித்தால் புத்தகங்கள் பரிசு என்று  அறிவித்தோம். அது நல்ல வரவேற் பைப் பெற்றது. மழலைகள், மாண வர்கள், இளைஞர்கள், குடும்பப் பெண் கள், முதியவர்கள் என அனைத்துத் தரப் பினரும் ஆர்வத்தோடு முன்வந்து திருக் குறள் வாசித்து புத்தகங்களைப் பெற் றுச் சென்றனர். பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், காவல் துறையினர், தீயணைப்புத் துறை அலுவலர் என  பலரும் திருக்குறள்களை சொன்னார் கள். இந்த திட்டம் வெற்றி பெற்றிருப் பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உற்சாகத்தில் மாணவர்கள் பயன்பெறுவதற்கு சின்னச் சின்னதாக கல்வி, வாழ்வியல் பயன்பாட்டுக்கு உத வக் கூடிய 47 தலைப்புகளில் புத்தகங் கள் தயாராகி வருகிறது. படிப்பு என் பதை மனப்பாடம் செய்வதாக, மதிப் பெண்ணுக்காக என்று குருட்டுத்தன மாக மாணவர்கள் நினைக்கின்றனர். ஆனால் படிப்பையும், நடைமுறை யுடன் இணைப்பதற்கு ஏற்ற முறையில் புத்தகங்கள் இருக்கின்றன. தற்போது புத்தகக் கண்காட்சிகள் எதுவும் நடை பெறவில்லை. அடுத்து மூன்று மாத காலம் அவகாசம் இருக்கிறது. ஜூன்  மாதத்தில் இருந்து கோவை, ஈரோடு  புத்தகக் கண்காட்சிகள் என அடுத்த டுத்து நடைபெற உள்ளன. அதற்கு  முன்பாக இப்புத்தகங்கள் தயாராகிவி டும், அதற்கான பணியில் இருக்கி றோம். எனினும் ஒரு புத்தகதத்தை அச் சிடுவதற்கு குறைந்தது ரூ.10 ஆயிரம்  முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும்.  47 தலைப்புகளில் புத்தகங்கள் அச்சிட ஏறத்தாழ ரூ.7 லட்சம் செலவாகும். எனவே அதற்காக தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம், என கவி உழவன்  மிகுந்த நம்பிக்கையுடன், உற்சாக மாகக் கூறினார்.