districts

img

இளைஞர் பெருமன்றத்தின் மாநில மாநாடு பேரணியை மலர் தூவி வரவேற்ற வாலிபர் சங்கம்

தருமபுரி, ஜன.27- தருமபுரியில் இளைஞர் பெருமன் றத்தின் மாநில மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற பேரணியை, மலர்கள் தூவி வாலிபர் சங்கத்தினர் வரவேற்றனர். அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் தமிழ்நாடு மாநில 18 ஆவது மாநாடு தருமபுரியில் ஜன.26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஞாயிறன்று தருமபுரி பாரதிபுரத்திலிருந்து துவங்கிய பேர ணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் டி.ராமச்சந்தி ரன் துவக்கி வைத்தார். இதில் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத் தின் அகில இந்திய செயலாளர் திரு மலை, அகில இந்திய பொதுச்செய லாளர் சுர்ஜித்சிங், மாநிலச் செயலாளர் பாரதி உட்பட பலர் கலந்து கொண்ட னர். தருமபுரி ஸ்டேட் வங்கி அருகே வந்தடைந்த பேரணியை இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் மலர்கள் தூவி வரவேற்றனர். இந்நிகழ்வில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அருள் குமார், மாவட்டத் தலை வர் குரளரசன், பொருளாளர் சிலம்பர சன், நிர்வாகிகள் பி.கோவிந்தசாமி, குப் பன், அருன், ரவி, கிருஷ்ணவேணி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.