கோவை அன்னூர் பகுதியில் உள்ள பொன்னே கவுன்டன் புதூர் கிளை நூலகத்திற்கு, வாசகர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாக 10 இருக்கைகளை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொன்னே கவுண்டன் புதூர் கிளை சார்பில் வழங்கப்பட்டது. நூலகர் பாரதியிடம் இந்த இருக்கைகளை ஒப்படைத்தனர். இந்நிகழ்வின்போது, வாலிபர் சங்கத்தின் முன்னாள் கோவை மாவட்டத் தலைவர் மணிகண்டன், அன்னூர் தாலுகா நிர்வாகிகள் சுகுமார், மகேந்திரன், ஜெகதீஷ், ராகுல், ரூபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.