திருப்பூர், ஜூன் 4 - தியாகி சீராணம்பாளையம் பழனிச்சாமி நினைவாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் சார்பாக உழைப்பு தானம் செய்யப் பட்டது. திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இடுவாய் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்ப பள்ளி, இடுவாய் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி, பளவஞ்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய வைகளில் ஞாயிறன்று தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இடுவாயில் நடந்த தூய்மை பணியில் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன், நிலவள வங்கி இயக்குநர் கே.ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கட்சி யின் இடுவாய் செயலாளர் கருப்புசாமி, பள்ளி ஆசிரியர் ரமேஷ், இடுவாய் சித்த மருத்துவர் நாட்டாமை குமாரசாமி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அருள், தெற்கு ஒன்றிய செயலாளர் க.சிந்தன், கமிட்டி உறுப் பினர்கள் ந.கார்த்திக், ல.சுர்ஜித், க.தீபா ஸ்ரீ மற்றும் கிளை நிர்வாகிகள் ந.ரமேஷ், ஈ. ராஜேஷ், ரா.தினேஷ், சு.பாரதி, நேதாஜி, திரு மூர்த்தி, அஜய், வெற்றி ஆகியோர் பணியில் ஈடுபட்டனர். பளவஞ்சிபாளையம் மாநகராட்சி நடு நிலைப் பள்ளியில் மயில்சாமி தலைமையில் தூய்மை பணி நடைபெற்றது.