ஈரோடு, ஆக.4- ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஓடை களை தூர்வாரும் பணிகள் ஞாயிறன்று துவங்கியது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட காசிபாளையம், சேனாபதி பாளையம், சத்யா நகர், சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளி லுள்ள ஓடைகளை தூர்வாரும் பணிகளை ஞாயிறன்று, வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணி யம், துணை மேயர் வி.செல்வராஜ், திமுக மாநகரச் செயலா ளர் மு.சுப்பிரமணியம், பகுதிச் செயலாளர் முருகேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.