districts

img

தெருவிளக்கு கேட்டு ஆட்சியர் வளாகத்தில் மண் விளக்கு ஏற்ற முயன்ற பெண்கள்

திருப்பூர், டிச.11- பூமலூர் பகுதி மக்கள் தெருவிளக்கு  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லா மல், இருட்டிலேயே வாழ்வதாக கூறி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மண் விளக்கு ஏற்ற முயன்றனர்.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா பூமலூர் பகுதிக்கு உட்பட்ட கோகுலம் கார்டன் பகுதியில் 250 க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இந்நிலையில் கடந்த 8  ஆண்டுகளாக அப்பகுதியில் குடி தண்ணீர் குழாய் அமைத்துத் தர வில்லை, தெரு விளக்கு வசதிகள் ஏற்ப டுத்திக் கொடுக்கவில்லை, முறையான  சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட  எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க திங்களன்று வந்திருந்தனர். மனு அளிக்க வந்த பெண்கள் திடீரென தங்கள் பகுதியில் தெரு விளக்கு வசதிகள் இல்லாததால் இருட்டிலேயே வாழ்வதாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மண் விளக்கு ஏற்ற முயன்றனர்.  இதனை காவல்து றையினர் தடுக்க முயன்றதால் இருதரப் பினருக்கிடையே வாக்குவாதம் ஏற் பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மனு அளிக்க அழைத்து சென்றனர்.