districts

img

கை குழந்தையை பேருந்து நிலையத்தில் கைவிட்டுவிட்டு சென்ற பெண்

திருப்பூர், பிப்.15- திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத் தில் பெண் ஒருவர் கை குழந்தையை மற் றொரு பெண் பயணியிடம் கொடுத்துவிட்டு  தலைமறை ஆகியுள்ளார். இதையடுத்து அப் பெண் பயணி குழந்தையை காவல் நிலையத் தில் ஒப்படைத்துள்ளார். குழந்தையை  கைவிட்டுவிட்டு சென்ற பெண் குறித்து காவ லர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். குழந்தைகள் உதவி மையத்திற்கு வியாழ னன்று காலை 10 மணி அளவில் அழைப்பு  வந்துள்ளது. அதில் திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பிறந்து 15 முதல் 20 நாட்களான பச்சிளம் குழந்தை கைவிடப்பட்ட நிலை யில் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் பெறப்பட் டது. தகவலின் அடிப்படையில் குழந்தை கள் உதவி மைய பணியாளர்கள் நேரில் சென்று விசாரித்தனர். விசாரித்ததில் காலை  எட்டு முப்பது மணி அளவில் பெண் ஒருவர்  பிறந்து 15 முதல் 20 நாட்கள் ஆன ஆண் குழந் தையை திருப்பூர் பழைய பேருந்து நிலை யத்தில் நின்று கொண்டிருந்த பெண் பயணி ஒருவரிடம் கொடுத்துவிட்டு,  கழிவறைக்கு சென்று வரும் வரை குழந்தையை வைத்தி ருக்குமாறு கூறிச் சென்றுள்ளார். நீண்ட நேரம்  ஆகியும் குழந்தையை விட்டுச் சென்ற பெண்  வராததால், அந்த பெண் பயணி குழந்தையை  காவலிலிருந்த உதவி ஆய்வாளரிடம் ஒப்ப டைத்துள்ளார். மேலும், குழந்தையை விட்டுச்  சென்ற பெண் குறித்து தகவல் எதுவும் கிடைக் காததால் குழந்தைகள் உதவி மையம் பணி யாளர் குழந்தையை மீட்டு 108 அவசர சிகிச்சை ஊர்தி மூலம் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவச் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். தற்பொழுது குழந்தை மருத்துவ சிகிச்சையில் நல்ல நிலையில் உள்ளது. குழந்தையை விட்டுச் சென்ற பெண் குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.