districts

img

விசாரணைக்காக அழைத்து சென்றவர் 10 ஆண்டுகளாக சிறையில்...

கோவை, ஜூன் 26- விசாரணைக்காக அழைத்துச்  சென்ற கணவரை 10 ஆண்டுகளாக வெளியில் விடவில்லை என்றும், வழக்கை விரைவாக நடத்தி கண வரை விடுதலை அல்லது ஜாமீனில் விட வேண்டும் என்று வலியுறுத்தி உடல் நிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஸ்டெச்சரில் வந்து கோவை  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் துள்ளார்.  கோவை, கரும்புக்கடையை சேர்ந்தவர் பாத்திமா. உடல் நிலை பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது கணவர் சுலைமான் என்பவர் குண்டு வெடிப்பு வழக்கு ஒன்றில் கைது  செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுக ளாக பெங்களூர் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். இதனிடையே கண வர் வழக்கில் எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை நெடுநாட்க ளாக சிறையில் வைத்திருப்பதாக வும், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் அல்லது சுலைமானுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாத்திமா திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு ஸ்ட்ரெச்சரில் வந்து மனு அளித்தார். இதுகுறித்து பாத்திமா கூறுகை யில், தனது கணவர் சுலைமான் மீது வழக்கு பதிவு செய்யாமலேயே கடந்த பத்து வருடமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கோவை யில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக் கும் போது திடீரென பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர் பாக விசாரிக்க வேண்டும் என்று  அழைத்துச் செல்லப்பட்டவரை இது ரை வெளியில் விடாமல், வழக்கும் நடத்தாமல் கிடப்பில் போட்டுள்ள னர். தற்போது, உடல் நிலை மோச மாகி படுத்த படுக்கையாக இருப்ப தாகவும், தனது கணவரை குறைந்த பட்சம் ஜாமீன் கொடுத்தாவது வெளியே அனுப்ப வேண்டும் என்று பாத்திமா வலியுறுத்தினார்.