districts

img

மரணம் அடைந்த கட்டிடத் தொழிலாளிக்கு நலவாரிய நிதி ரூ. 55,000 சிஐடியு வழங்கியது

அவிநாசி, ஜூன்.26- அவிநாசி அருகே கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி இயற்கை மரணம் அடைந்ததை ஒட்டி, சிஐ டியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கம்  சார்பில் திங்களன்று நல வாரிய நிதி ரூ.55 ஆயி ரம் வழங்கப்பட்டது. அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகு தியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமாள்.  இவர் சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலா ளர் சங்கம் மூலமாக நலவாரியத்தில் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு இயற்கை மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து, சிஐடியு கட் டிட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பாக,  நல வாரியத்தில் இருந்து இயற்கை மரண நிதி யாக ரூ.55,000 மரணம் அடைந்த ராமாள் குடும் பத்திற்கு வழங்கப்பட்டது.  இதனை சிஐடியு கட்டிட கட்டுமான தொழி லாளர் சங்கம் மாவட்ட செயலாளர் ராஜன், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் வேலுச் சாமி, ஒன்றிய செயலாளர் கனகராஜ் மற்றும்  கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளிகள் உடன் இருந் தனர்.