districts

img

35 அடியாக குறைந்த சோலையாறு அணை நீர்மட்டம்

கோவை, பிப்.1- வால்பாறை அருகே உள்ள சோலை யாறு அணை நீர்மட்டம் 35 அடியாக குறைந்ததால், அங்குள்ள 2 மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப் பட்டது. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத் தில் முக்கிய அணையாக வால்பாறை சோலையாறு அணை உள்ளது. 160  அடி நீர் மட்டம் கொண்ட சோலையாறு அணையின் நீர் பிடிப்பு பகுதி 37 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. சோலையாறு அணைக்கு 2 மின் நிலை யங்கள் உள்ளன. இதில் மின் நிலை யம்-1 மூலம் 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் பிறகு வெளியேறும் தண்ணீர் பரம்பிக் குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையாறு மின் நிலையம் - 2  மூலம் 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்பிறகு வெளி யேறும் தண்ணீர் ஒப்பந்தப்படி கேர ளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகி றது. இந்நிலையில், வால்பாறை பகுதி யில் கடந்த அக்டோபர் மாதத்திலி ருந்து பருவமழை நின்றுவிட்டது. கடு மையான வெயில் வாட்டி வருகிறது. இரவில் கடுங்குளிர் நிலவுகிறது. சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்தை ஏற்படுத்தி தரும் நடுமலை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு, வெள் ளமலை ஆறு, கூழாங்கல் ஆறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் வற்றியது. இத னால் சோலையாறு அணைக்கு தண் ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக 160 அடி கொள்ள ளவு கொண்ட சோலையாறு அணை யின் நீர்மட்டம் செவ்வாயன்று காலை 6  மணி நிலவரப்படி 35 அடியாக குறைந் தது. இதனால், அணையில் போதிய தண் ணீர் இல்லாததால் சோலையாறு மின் நிலையம் -1, மின் நிலையம் -2 ஆகிய மின் நிலையங்களுக்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அந்த 2 மின் நிலையங் களிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள் ளது. நீர்மட்டம் மிக குறைவாக உள்ள நிலையில் மின் உற்பத்திக்கு தண்ணீர் திறந்தால் சேறும், சகதியும் கலந்து வரும். இதனால் மின் உற்பத்தி மோட் டார்கள் பழுதடைந்து விடும் நிலை ஏற்ப டும். தற்போது, நீர்மட்டம் குறைந்த தால் சோலையாறு அணை மற்றும் பூங் காவில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.