districts

img

சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்றக் கூடாது

சேலம், ஏப்.24- சேலம் மேக்னசைட் சுரங்கத் தில் உள்ள நீரை வெளியேற்றக்  கூடாது. அவ்வாறு வெளியேற்றி னால் மிகப்பெரிய போராட்டம் நடத் தப்படும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். சேலம், தேக்கம்பட்டி, மூங்கில் பாடி, வெள்ளாளப்பட்டி, கொல்லப் பட்டி, சக்கரசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், ஓமலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மணி தலை மையில் மாமாங்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மேக்னசைட் அலு வலகத்தில் புகார் அளித்தனர்.  அதன்பிறகு, செய்தியாளர்களி டம் பேசிய அப்பகுதி மக்கள், தேக் கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மேக்னசைட் சுரங்கத் தில் அதிக நீர் உள்ளது. அந்த நீரை  நம்பி எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நம்பி உள்ளனர். குறிப்பாக விவ சாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதார மாக விளங்கக்கூடியது. ஆனால், சுரங்கத்தில் இருக்கும் நீரினை அதி காரிகள் ராட்சத பம்புகளை வைத்து  நீரை வெளியேற்றி வருகின்றனர்.  நீரை வெளியேற்றினால் எங்க ளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்  அபாயம் உள்ளது தற்போது சுரங் கத்தில் இருக்கும் நீரினால் எங்கள்  பகுதியில் உள்ள திறந்தவெளி கிண றுகள் மற்றும் ஆழ்துளை கிணறுக ளுக்கு நிலத்தடி ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. சுரங்க நீர் அகற் றினால் கடும் வறட்சி ஏற்படும், மக்கள் அனைவரும் ஊரை விட்டு  வெளியேறும் நிலை ஏற்படும்.  கடந்த சில நாட்கள்  முன்பு கருத்து கேட்கும் கூட்டத்தில் சுரங் கத்தில் இருக்கும் நீரை வெளியேற் றக் கூடாது என எதிர்ப்பு தெரிவித் திருந்தோம், நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தற்போது நீரை  வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். எனவே நீரை வெளி யேற்றும் பணியை முற்றிலும் கைவிட வேண்டுமென தெரிவித்த னர். இல்லையென்றால் மிகப்பெ ரிய அளவில் போராட்டம் நடத்தப்ப டும் எனவும் கூறினர்.