கோவை மாவட்டம், ஆனை மலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கோட்டூர் பேரூராட் சிக்கு உட்டபட்டது நவமலை எனும் பழங்குடியின வன கிரா மம். இப்பகுதியில் 40க்கும் மேற் பட்ட பழங்குடியின மலசர் சமூகத்தை சார்ந்த குடும்பங் கள் வசித்து வருகின்றன. இவர்கள் அருகிலுள்ள மின் வாரிய குடியிருப்புகளில் தினக் கூலிகளாகவும், கட்டிட தொழி லாளர்களாகவும், விவசாய கூலித்தொழிலாளர்களாகவும், தனியார் தோட்டங்களின் பாது காவலர்களாகவும், விவசாய பண்ணைகளில் கூலித் தொழில் செய்தும் தங்களது வாழ்வா தாரத்தை நகர்த்தி வருகின்ற னர். பல தலைமுறைகளாக இப் பகுதியில் இவர்கள் வசித்து வந்தபோதிலும் தற்போது வரை அவர்களுக்கு அவர்கள் வசிக்கும் நிலம் கூட சொந்த மில்லை.
எட்டிக்கூட பார்க்காத அரசு அதிகாரிகள்
இதுகுறித்து, நவமலை யைச் சேர்ந்த பழங்குடியின மக் கள் கூறுகையில்; நவமலை வன கிராமத்தில் பூர்விகமாக நாங் கள் வசித்து வருகிறோம். இங்கு தொடர் மழைக்காலங்களில் நவமலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகளவில் ஏற்ப டும். ஆனாலும், குடியிருப்பு களுக்குள் வெள்ளநீர் வந்த தில்லை. அதேநேரம், குடியி ருப்புகள் முழுமையாக, முறை யாக கட்டப்படாததால் மழை நீர் எங்களது வீடுகளுக்குள் எளிதாக புகுந்துவிடும். இத னால் எங்களது உடமைகளும், சேமித்து வைத்திருக்கும் உணவு பொருட்களும் சேதமா கும். அச்சமயங்களில் வனத் துறையினர் எங்களை அங்கி ருந்து வெளியேற்றி மின்வா ரிய குடியிருப்புகள் தங்க வைப்பார்கள். இதன்பின்னர் நிலைமை சரியானவுடன் எங்க ளது குடியிருப்புகளுக்கு நாங் கள் மீண்டும் வந்துவிடுவோம். இந்த கிராமத்தில் எங்க ளது மூதாயதையர் தொன்று தொட்டு பூர்விகமாக பல தலை முறைகளாக வாழ்ந்து வருகின் றோம். ஆனால், எங்களது குடி யிருப்புகளுக்கு இன்றுவரை அரசால் நிலப்பட்டா வழங்கப்ப டவில்லை. நிலப்பட்டா கோரி தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகின்றோம். குறிப் பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினருடன் சேர்ந்து பல கட்டமாக தொடர் போராட்டங்களை மேற் கொண்டு வருகிறோம். அப்போ தொல்லாம் பேச்சுவார்த் தைக்கு வரும் அரசு அதிகாரி கள், நிலப்பட்டா உள்ளிட்ட அடிப்படைகள் செய்து தருவ தாக வாக்குறுதி அளித்து செல் வார்கள். ஆனால், அதன்பின் இங்கு அரசு அதிகாரிகள் பெய ருக்குகூட எட்டிக்கூட பார்ப்ப தில்லை. இதனால் எங்களின் குரல்கள் அரசிற்கு கேட்கிறதா என்பது கூட இதுவரை எங்க ளுக்கு தெரியவில்லை. ஆகவே, நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்கான நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். குறிப்பாக, கல்லார்குடி, தெப்ப குளமேடு பகுதியில் அரசு சார் பில் நில ஒதுக்கீடு செய்ததைப் போல் தங்களது வன கிராமத் திற்கும் ஒதுக்கீடு செய்ய வேண் டும். இதேபோல், வேட்டைக்கா ரன் புதூர் பேரூராட்சிக்குட்பட்ட தம்மம்பதி மலைவாழ் மக்க ளுக்கு அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டதை போல் எங்க ளுக்கும் வழங்கிட வேண்டும் என்றனர்.
கனவான கழிப்பறை
மேலும், தமிழக அரசின் பழங்குடியினர் நடமாடும் மருத் துவ ஊர்தி என்ற வாசங்களை தாங்கியிருக்கும் அரசின் ஆம்பு லன்சு வாகனம் ஒன்று மாதம் ஒரு முறை எங்களது நவமலை கிராமத்தை எட்டிப்பார்த்து சென்றுவிடும். ஆனால், அந்த வாகனத்தையும் இரண்டு ஆண்டுகளாக எங்களால் பார்க்க முடிவதில்லை என வேதனையோடு தெரிவிக்கின் றனர் அப்பகுதி மலைவாழ் மக்கள். இதேபோல், கழிவறை என்பதே எங்களது வாழ்வில் கனவாகவே உள்ளது. திறந்த வெளியை மட்டுமே இன்றள வும் பயன்படுத்துகிறோம். இதனால் பூச்சிக்கடிகளுக் கும்,நோய்த்தொற்றிற்கும் ஆளாகி வருகிறோம். ஆகவே, மாதம் ஒரு முறையாவது நவ மலை முழுவதும் மருத்துவ முகாம் அமைத்து பரிசோத னைகள், சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகள் வழங்கிட வேண் டும். மேலும், ரத்த அளவு, சர்க்கரை அளவு, உள்ளிட் டவை பரிசோதனை செய்ய வேண்டும். இதைத்தவிர்த்து, மிக மிக அடிப்படை வசதியாக மின்சார வசதியையும் ஏற் படுத்திட வேண்டுமென்ற கோரிக்கையையும் மலைவாழ் மக்கள் முன்வைக்கின்றனர்.
இழுத்தடிக்கப்படும் சாதிச்சான்று
மேலும், எங்களது கிராமம் பொருத்தவரையில் 10ம் வகுப்பு கூட யாரும் தேர்ச்சி பெறவில்லை. அதனால் நாங் கள் கூலித்தொழிலுக்குத் தான் சென்று வருகிறோம். இதைத் தாண்டி பள்ளிக்கு சென்றால் பள்ளியில் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள், அதனை வட் டாட்சியர் அலுவலகத்தில் சென்று வாங்குவதற்குள் எங் களது ஆயுட்காலமே முடிந்து விடும் என வேதனையுடன் கூறு கின்றனர் நவமலை பகுதி பழங் குடியின மக்கள். இதேபோல், வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர் பணிக்குகூட இதுவரை பழங்குடி மக்களான எங்களுக்கு வாய்ப்புகள் தர வில்லை. ஒரு வேளை வாய்ப்பு கள் கிடைத்தால் நவமலை கிரா மத்தில் முதல் அரசு ஊழியர் உருவாகலாம் என்கின்றனர். ஆகவே, நவமலை வன கிராமத்தில் பூர்விகமாக வசித்து வரும் பழங்குடியின குடும்பங்களின் குடிசைகளை நில அளவை செய்து, அவர்க ளுக்கு உடனடியாக நிலப்பட்டா வழங்கிட வேண்டும். மின் இணைப்பு வழங்கி அவர்க ளின் வாழ்வில் விடியலை உரு வாக்கி ஒளியேற்ற அரசு நிர்வாகம் முன்வர வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, சுகா தாரம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து அழிவின் விளிம்பில் உள்ள நவமலை எனும் வன கிரா மத்தை பாதுகாக்கும் வகை யில் தமிழக அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நவ மலை பழங்குடியின மக்களின் கோரிக்கையாக உள்ளது.
த.கா.மணியாழன்
பொள்ளாச்சி.