districts

img

குடியிருப்பை மறைத்து கல்குவாரிக்கு அனுமதி கிராம மக்கள் நூதன ஆர்ப்பாட்டம்

நாமக்கல், பிப்.27- குடியிருப்பு பகுதி இருப்பதை மறைத்து  கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண் டித்து, எலச்சிபாளையம் கிராம மக்கள் விநோத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு  உட்பட்டது கோக்கலை கிராமம். அங்கு தனி நபர் ஒருவரின் கல்குவாரிக்கு சட்டவிரோ தமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகு றித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் பொதுமக்கள் புகார் தெரிவித் திருந்தனர்.  இந்நிலையில், குடியிருப்பு பகுதிகள், பசு மைவீடுகள் ஆகியவை இருப்பதை மறைத்து  சட்ட விரோதமாக கல்குவாரிக்கு அனுமதி அளித்திருப்பதை அறிந்த பொதுமக்கள், முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபா கரனை கண்டித்தும், விவாசாயிகள் ஆட்சே பனை தெரிவித்தும், பல மனுக்கள் அளித் தும் இதனை ஏற்காமல் பொய்யான சான்று வழங்கிய பிடிஓவுக்கு பாராட்டு விழா நடத் தியும் விநோதமான ஆர்ப்பாட்டத்தை நடத்தி னர். பிடிஓ அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தவறாக சான்று  வழங்கியதை ரத்து செய்து, கல்குவாரி களை நிரந்தரமாக மூட வேண்டும் என முழக் கங்களை எழுப்பினர். இதில், போராட்ட ஒருங் கிணைப்புக் குழு தலைவர் விவசாயி பழனி வேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் சுரேஷ்,  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வெங்கடா சலம் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து  கொண்டனர்.