மேட்டுப்பாளையம், பிப்.24- கோவையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானையை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விட கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத் ்தினால் வனத்துறையினர் வேறு வழியின்றி யானையை அழைத்து வந்த லாரியினை திருப்பி கொண்டு சென்றனர். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் நாற்பது வயது மதிக்கத்தக்க மக்னா என்ற வகையினை சேர்ந்த தந்தம் இல் லாத ஆண் காட்டு யானை காட்டி னுள் செல்லாமல் அதிகளவில் விவ சாய பயிர்களை தொடர்ந்து சேதப் படுத்தி வந்தது. இதையடுத்து, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர், இந்த யானையை கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்துள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. பத்து நாட்களாக வனப்பகுதியில் சுற்றித் திரிந்த மக்னா யானை மீண்டும் காட்டை விட்டு வெளியேறி சுமார் நூற்று நாற்பது கிலோமீட்டர் வரை பயணித்து கோவை நகர பகுதி களான குனியமுத்தூர், மதுக்கரை, பேரூர் என உலா வரத்துவங் கியது. பட்டப்பகலில் குடியிருப்பு பகுதிகள் வழியே நடமாடிய யானையை கண்டு மக்கள் அச்சம டைந்தனர். விவசாய பயிர்களை தேடி பேரூர் பகுதியில் சுற்றி வந்த யானையினை வியாழனன்று மாலை வனத்துறையினர் மீண்டும் கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதையடுத்து மயக்கத்தில் இருந்த மக்னா யானையை வனத்துறை யின் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்ற வனத்துறையினர், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணையினை சுற்றியுள்ள வெள்ளி யங்காடு வனப்பகுதியான கூடப் பட்டி என்னுமிடத்தில் விடுவிக்க திட்டமிட்டனர்.
இதன்படி, வியாழனன்று நள் ளிரவு ஒரு மணியளவில் மக்னா யானையை ஏற்றிய லாரி வெள்ளி யங்காடு கிராமத்தை அடைந்த போது அங்கிருந்த விவசாயிகளும், கிராம மக்களும் ஒன்று திரண்டு லாரியினை மறித்தனர். யானை ஏற்றபட்டிருந்த வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். ஏற்கனவே, யானைகளின் தொல்லையால் பயிர் மற்றும் உயிர் சேதங்களை சந்தித்து வரும் நிலை யில், மீண்டுமொரு யானையை இப்பகுதியில் விட அனுமதிக்க இயலாது என வனத்துறையின ருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். நடு இரவில் நடைபெற்ற இப்போராட்டம் காரணமாக காவல் துறையினர் வரவழைக்கபட்டனர். இரு தரப்பினரும் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து வேறு வழியின்றி பின்வாங்கிய வனத்துறையினர் யானை கொண்டு வரப்பட்ட வாக னத்தை திருப்பி கொண்டு சென் றனர்.
பின்னர், யானை ஏற்றி வந்த வாகனம் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்த மான அரசு மரக்கிடங்கு வளாகத் திற்கு கொண்டு வரப்பட்டு தற் போது நிறுத்தப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பு காரணமாக பிடி பட்ட யானையினை எங்கு விடுவது என்பதில் சிக்கல் உருவானது. இதனையடுத்து,மேட்டுப் ப்பாளையம், சிறுமுகை வனப் பகுதில் யானையை விடுவது குறித்தும் அல்லது முதுமலை வனப் பகுதிக்கு யானையினை கொண்டு சென்று விடுவது குறித்தும் வனத் துறை உயர் அதிகாரிகள் ஆலோச னையில் ஈடுபட்டனர். இதனைத் ்தொடர்ந்து, மீண்டும் மானாம்பள்ளி மந்திமட்டம் அடர் வனத்தில் விடு வது என முடிவெடுத்து யானை கொண்டு வந்த வாகனத்தை திருப் பினர். இதுகுறித்து, சூழலியலாளர்கள் கூறுகையில், மக்னா யானையை வெள்ளியங்காடு அடுத்த, பில்லூர் வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றபோது, அங்குள்ள மக்கள் யானையை இங்கு விடக் கூடாது என மறியல் செய்து விரட்டி யுள்ளனர். ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக நகரப்பகுதிக்குள் சுற்றியபோதும், தேவையான உணவு கிடைக்காமல் அவதிப் பட்டு வந்தது. தற்போது, யானையை பிடித்து 24 மணி நேரத் திற்கும் மேலாகியும் வாகனத்தி லேயே வைத்து சுற்றுவதால் உணவு கொடுக்க முடியாத நிலை இருக்கிறது. மேலும், யானையை பிடிக்க மூன்று முறைக்கும் மேல் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். இதனால், யானையின் உடல் மிகவும் மோசமடைந்து வரு கிறது. யானை இறந்தால் கூட்டம் கூட்டமாக வந்து பூ தூவி கண் ணீரும், கம்பளையுமாக கும்பிடு கிறார்கள். ஆனால், உயிரோடு கொண்டு வந்து வனப்பகுதிக்குள் விடவந்தால், விடாதீர்கள் என்று மறியல் செய்கிறார்கள். இவர் களை எப்படி புரிந்து கொள்வ தென்றே புரியவில்லை என்றனர்.