districts

img

வேகத்தடையில் ஏறிய வாகனம் இரண்டு துண்டாக உடைந்தது

தாராபுரம், செப்.6- தாராபுரத்தில் வேகத்தடையில் ஏறி இறங்கிய காய்கறி  வாகனம் இரண்டு துண்டாக உடைந்ததால் போக்குவரத்து சேதமடைந்தது. தாராபுரத்தில் அவிநாசிபாளையம் முதல் ஒட்டன்சத்திரம் வரை நான்கு வழிச்சாலை உள்ளது. இதில் தாராபுரம் ஆச்சி யூர் பிரிவு அருகே தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு  வந்தன. அதற்காக (ஆர்.சி.சிஎல்) தனியார் நிறுவனத்தினர்  ஆச்சியூர் பகுதியில் புதிதாக வேகத்தடை அமைத்திருந்தனர்.  அதில் ஒரே இடத்தில் அடுக்கடுக்காக நான்கு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைத்த வேகத்தடையில் கனரக வாகனங்கள் அதிக வேகத்துடனுன் ஏறிச்செல்லும் பொழுதும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி பழுத டைந்து வந்தன. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் குண்டல் பேட்டிலிருந்து மதுரைக்கு காய்கறி ஏற்றிய வந்த சரக்கு வாக னத்தை ஓட்டுநர் மஞ்சு என்பவர் ஓட்டி வந்தார். சம்பவத் தன்று இரவு ஓட்டுநர் வேகத்தடையில் கடக்க முயன்ற போது  வண்டியின் சேஸ் இரண்டு துண்டாக உடைந்து வேகத்தடை யின் நடுவே நின்றது. இதனால் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் வாக னத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாததால் வாகனம்  மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மீண்டும் இதுபோல  விபத்துகள் ஏர்படாமல் இருக்க வேகத்தடையின் உயரத்தை  குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத் துள்ளனர்.