மேட்டுப்பாளையம், நவ.1- மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக சாலையோரம் இருந்த மேபிளவர் மரம் வேரோடு சாய்ந்து அவ்வழியே சென்ற கார் ஒன்றின் மீது விழுந்தது. நல்வாய்ப் பாக காரின் உள்ளே இருந்தவர்கள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழனன்று இரவு ஏழு மணி யளவில் பெய்ய துவங்கிய மழை இரவு முழுவதும் பெய்த படி இருந்தது. வெள்ளியன்று காலையும் மழையின் தாக் கம் தொடர்ந்தது. இந்நிலையில், வெள்ளியன்று மதியம் மேட்டுப்பாளை யத்தில் இருந்து அன்னூர் செல்லும் நெடுஞ்சாலையில் நடூர் பாலம் அருகே சாலையோரம் இருந்த பெரிய மேபிளவர் மர மொன்று இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரண மாக வேரோடு சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது. அப்போது கோவை சிங்காநல்லூர் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள நண்பரை காண வந்த சுஜி பத்குமார் மற்றும் அவரது மனைவி லில்லி மற்றும் 12 வயது மகள் தியா ஆகியோர் பயணித்த கார் மீது மரம் விழுந்தது. சரிந்த மரத்தின் அடியில் கார் சிக்கி கொண்டது. இதில், மரத்தின் கிளைகள் காரின் முன்பக்கம் விழுந்த நிலையில் நல்வாய்பாக சுஜிபத்குமார் மற்றும் மனைவி மகள் ஆகியோர் உடனடியாக காரை விட்டு வெளியேறி உயிர் தப்பி னர். காரின் முன் பக்கம் மட்டும் சேதமடைந்தது. இவ்விபத்தில் அவ்வழியே போக்குவரத்து பாதிக் கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீய ணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி நவீன அறுவை இயந்திரங்கள் மூலம் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.