தருமபுரி, ஜூலை 14- தருமபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முயற்சியால் 8 மையங்களில் நீட் தேர்வு நடத்த ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது. தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மத் திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாலவியாவிற்கு கடி தம் எழுதியிருந்தார். அதில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளிமாநிலங்களான கர்நாடகா, கேரளா வில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதாக சுட்டிக்காட்டியி ருந்தார். இதனால் மாணவர்கள் 900 கி.மீ பயணம் செய்து தேர்வு எழுதும் நிலை உள்ளது. எனவே, தமிழக நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என தருமபுரி எம்பி செந்தில்குமார் கோரியிருந்தார். இந்நிலையில், கடந்த செவ் வாயன்று நீட் தேர்வு ஹால் டிக்கெட் அனுப்பும் பணி தொடங்கி யது. அதில், தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்க ளுக்கு தருமபுரி மாவட்டத்தில் முதன் முறையாக நீட் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று 8 நீட்தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில், கேந்தரிய வித்யாலயா பள்ளி, செந்தில் பப்ளிக் ஸ்கூல், விஜய் மில்லினியம் ஸ்கூல், விஜய் வித்யாஷ்ரம் உள் ளிட்ட 8 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.