districts

இமயமலையையே சோற்றில் மறைக்கும் ஒன்றிய பாஜக அரசு

ஈரோடு, நவ.29- பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் கள் என்கிற சொலவடை தமிழகத்தில் உண்டு. ஆனால் ஒன்றிய பாஜக அரசு இமயமலை யையே மறைக்கப்பார்க்கிறது என ஈரோட் டில் நடைபெற்ற கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினரும், மாதர் சங்கத்தின் அகில இந்திய  துணைத்தலைவருமான உ.வாசுகி குற்றஞ் சாட்டினார். அரசியல் சாசன தினம் மற்றும் விவசாயி கள் விரோத சட்டத்தை எதிர்த்து தலைநகர் தில்லியை முற்றுகையிட்ட விவசாயிகளின் பேரெழுச்சிமிக்க போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு சிறப்பு கருத்தரங்கம் ஈரோட்டில் நடைபெற்றது. தொழிலாளர்கள், விவசாயி கள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் சிறு  தொழில் பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்திய கருத்தரங்கிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைச்செயலா ளர் கே.மாரப்பன் வரவேற்றார்.

 இதில், “ஜனநாயகம், சமத்துவம், பெண்  விடுதலை” என்ற தலைப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய  துணைத்தலைவர் உ.வாசுகி கருத்துரையாற் றினார். அப்போது அவர் பேசுகையில், ஜன நாயகம் இருந்தால் தான் சமத்துவத்தை நோக்கி செல்ல முடியும். ஜனநாயகமும், சமத்துவமும் முழுமை பெற்ற அமைப்பில் தான் பெண் விடுதலை என்பது சாத்தியம். ஜனநாயகத்தில் ஏழை, பணக்காரன், ஆண், பெண்கள், திருநர், தாழ்த்தப்பட்ட,  பழங்குடியினருக்கு என வெவ்வேறான  அளவு கோள்கள் இருக்கக்கூடாது. இன்றைக் கும் தமிழகத்தின் பல இடங்களில் தலித்  துகளில் ஒருவர் இறந்தால், பிற சாதியினர் வசிக்கும் தெருவழியே எடுத்துச்செல்ல முடியாது என்கிற நிலை உள்ளது. ஆளுங் கட்சிக்கு ஒரு ஜனநாயகம், எதிர்க்கட்சிக்கு ஒரு ஜனநாயகம் தான் உள்ளது. பெண்கள்  மீதான வன்முறை, பட்டியலின, பழங்குடி மக்கள், திருநர் சந்திக்கும் பிரச்சனைகள் அவர்களுக்கு மட்டுமானதல்ல. உரிமைகள் மறுக்கப்படுகிற இதர பிரிவினருக்காக குரல் கொடுத்தால் தான் இன்றைக்குள்ள ஓரளவு ஜனநாயகமும் பாதுகாக்கப்படும்.

ஒன்றிய அரசால் மாநில உரிமைகள் கடந்த காலத்தைவிட மோடியின் ஆட்சியில் பலவிதங்களில் பறிக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தின் படி ஆட்சி செய்ய வேண்டியவர் கள், அதனைப் புறக்கணிக்கும் ஆட்சி இந்தி யாவில் நடந்து கொண்டுள்ளது. அதற்கு  முரணாகப் பேசுகிறவர்கள் ஆளுநர்களாக உள்ளனர். மோடி அரசு மாநில உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் வகையில் செயல் படுகிறது. இந்தி திணிப்பு போன்ற கண்ணுக் குத் தெரியும் விசயங்களுக்கு களத்திற்கு வரு கிறோம். நிதி, வரி, ஜிஎஸ்டி இழப்பீடு போன்ற  விசயங்களில் அவ்வாறு நடப்பதில்லை. மாநி லங்களுக்கு உரிய நிதி, வழங்கப்படுவதில்லை. பாக்கி வைக்கிறது. மக்களின் கோபம் மாநில அரசுகளின் மேல் திரும்புவதற்கான ஏற் பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது. 100 நாள் வேலை, குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகியவை இடதுசாரிகளின் ஆதரித்ததால், நிர்பந்தத்தால் சட்டமானது. கிராமங்களில் வேலை கேட்பவருக்கு வேலை கொடுக்க  வேண்டும் என்பது சட்டம். அவ்வாறு உரிய காலத்தில் வேலை கொடுக்கப்படவில்லை என்றால் இழப்பீடு கொடுக்க வேண்டும். யாரும் வேலை கேட்கவில்லை, அதனால் அதற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது என் கின்றனர். அதேசமயம் 1.5 கோடி வேலை  கேட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள் ளது என்று புள்ளி விபரங்கள் கூறுகிறது.

பூச னிக்காயை சோற்றில் மறைக்கப்பார்ப்பர். ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்கள் இமய மலையையே மறைக்கப் பார்க்கின்றனர். ஜன நாயகத்தை, சமத்துவத்தை பாதுகாக்க வேண் டுமென்றால் எதிர்வரக்கூடிய சவால்களை புரிந்து கொண்டு கார்ப்பரேட், வகுப்புவாத பாஜக அரசை எதிர்க்க கருத்தாலும், கரத்தா லும் அணி திரட்ட வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து, “விவசாயிகளின் பேரெழுச்சி” என்ற தலைப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு, “ஒன்றுபடு, போராடு, வெற்றி பெறு” என்ற தலைப்பில் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க அகில இந்திய இணைச்செய லாளர் எம்.கிரிஜா ஆகியோர் கருத்துரை யாற்றினர். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ். சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம், துணைத் தலைவர் ஆர்.ரகுராமன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.வி.மாரி முத்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.ஆர்.விஜயராக வன், செயலாளர் கே.சண்முகவள்ளி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் எஸ்.விஜயமனோகரன் நன்றி கூறினார்.