இரு செயற்குழு உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து சாடல்
திருப்பூர், நவ. 17 – திருப்பூர் ஏற்றுமதியாளர் சங் கத் தலைமை எவ்வித ஜனநாயக நெறிமுறையையும் மதிக்காமல் செயல்படுவதாகவும், இவர்க ளுடன் சேர்ந்திருந்தால் தங்களது நற்பெயரும் கெட்டுப் போகும் எனக் கூறி சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் இருவர் பதவி விலகி விட்டனர். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்திற்கு கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி தேர்தல் அறிவிக் கப்பட்டது. இதில் போட்டியிட மனுச் செய்தவர்களிடம் சங் கத்தின் மூத்த முன்னோடிகளைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி போட்டியைத் தவிர்த்தனர். அதையடுத்து ஏற்கெனவே இருந்த தலைவர் ராஜா சண்முகம், பொதுச் செயலா ளர் விஜயகுமார் உள்ளிட்டவர் கள் போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டனர். அவர்களுடன் சங்க செயற்குழு உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனால் நிர்வாகிகள் பொறுப் பேற்று ஒன்றரை மாத காலத்திற் குள்ளாக ஆனந்த், மேழிச்செல்வன் எனும் இரு செயற்குழு உறுப்பி னர்கள் பதவி விலகுவதாக சங்கத் தலைவர் ராஜா சண்முகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் விபரம் வரு மாறு: சங்க நிர்வாகிகள் தேர்த லுக்கு முன்பாக, சமரச நடவடிக் கையில் மூத்த முன்னோடிக ளுடன் நாங்களும் இணைந்து போட்டியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். அதன் படி பொதுச் செயலாளருக்குப் போட்டியிட்ட குமார் உள்ளிட் டோர் விலகிக் கொண்டனர். பொதுச் செயலாளராக விஜயகுமா ரும், இணைச் செயலாளர்களாக செந்தில்குமார், ராஜேந்திரன் ஆகியோரும் முடிவு செய்யப் பட்டனர்.
அதேசமயம் இந்த சமரசத் தீர்வு, வேட்பு மனு வாபஸ் தேதிக் குப் பின்னர் ஏற்பட்டதால், சட்டப் படி வாக்குப்பதிவை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே சமரசத் தீர்வை ஏற்று வாக்குப்பதிவு நாளில் உறுப்பி னர்கள் யாரும் வாக்களிக்க வேண்டியதில்லை, அப்படியே வாக்களிப்பதாக இருந்தாலும் சமரசப் பேச்சில் ஒப்புக் கொண் டபடி விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வாக்களிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. எனினும் சமரச உடன்பாட் டுக்கு மாறாக தற்போதைய பொதுச் செயலாளர் விஜயகுமா ரும், இணைச் செயலாளர் செந்தில் குமாரும் சங்கத்தின் குறிப்பிட்ட உறுப்பினர்களை தொலைபேசி யிலும், இதர வழிகளிலும் தொடர்பு கொண்டு தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டினர். குறிப்பாக உடன்பாடு ஏற்பட்டு போட்டியில் இருந்து விலகிக் கொண்ட, தங்கள் ஆதரவாளர் சோமசுந்தரம் என்பவருக்கு வாக்களிக்கும்படி அவர்கள் ஆதரவு திரட்டினர். இதைப் பற்றி நேரடியாகவே பொதுச் செயலாளர் விஜயகுமாரிடம் தொடர்பு கொண்டு, சமரச உடன்பாட்டுக்கு மாறாக இது போல் செய்வது சரியில்லை என்றும் தெரிவித்தோம்.
இது முற்றிலும் நெறியற்ற செயல் என்பதை தலைவர் ராஜா சண்முகம், இதர நிர்வாகிகள் மற்றும் சமரச நடவடிக்கையில் ஈடுபட்டோரிடம் தெரிவித்தோம். ஆனால் துரதிருஷ்டவசமாக இதன் மீது, உயர்ந்த பதவியில் இருப்போரிடம் இருக்க வேண்டிய அறநெறிஇன்றி அலட்சியமான பதிலே கிடைத்தது. ஒட்டுமொத்த சமரச நடைமுறையில் ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்பாடுகளை நீங்களும் (ராஜா சண்முகம்), உங்கள் அணியினரும் மீறிவிட் டனர். சங்கத் தலைவராக ராஜா சண்முகம் சமரச உடன்படிக் கையை மதித்து நடக்கத் தவறி விட்டார். இத்தகைய சூழ்நிலை யில் செயற்குழு உறுப்பினர்களாக நீடிப்பதற்கு எவ்வித நேர்மையான முகாந்திரமும் இல்லை, எங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும், ஏற்கெனவே உங்கள் தரப்பைச் சேர்ந்த சில நிர்வாகிகள் நெறியற்ற முறையில், எங்களைக் களங்கப்படுத்தும் செயலைச் செய்துள்ளனர். எனவே நாங் கள் பதவி விலகுகிறோம் என்று இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள னர். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங் கத்தின் தலைமைப் பொறுப்பை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந் தவர்கள் கைப்பற்றியுள்ளனர் என்பது ஏற்கெனவே தெரிந்த விசயம், அத்துடன் அவர்கள் அந்த சங்கத்தின் குறைந்தபட்ச ஜனநாயக நடைமுறையையும், ஒப்புக்கொண்ட உடன்பாடுக ளையும் கூட மதிக்காமல் தங்க ளுக்கு (காவி) ஆதரவானவர்களை மட்டும் நிர்வாகிகளாக நியமித் துள்ளனர் என்பதை பதவி விலகிய செயற்குழு உறுப்பினர்களின் கடிதம் அம்பலப்படுத்தி உள்ளது. இந்த கடிதம் கடந்த நவம்பர் 9ஆம் தேதி எழுதப்பட்டுள்ளது. தற்போது ஒரு வார காலம்தான் ஆகிறது. ஆனால் இதற்கிடை யில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி இந்த இரு செயற்குழு உறுப்பினர்களின் இடத்தில் தங் களுக்கு வேண்டப்பட்ட இருவரை செயற்குழு உறுப்பினர்களாக நியமித்துக் கொண்டனர் என்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தைச் சேர்ந்தோர் தெரிவித்தனர்.