பொள்ளாச்சி, மே 22- பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள மின் கம்பங்களில் உரசும் மரக்கிளைகளை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. இதனால், அவ்வப்போது மரக்கிளைகள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு, மின் விநியோகம் தடைபடுகிறது. மேலும், தமிழகத் தில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மின் கம்பிகளில் உரசும் நிலையில் உள்ள மரக்கிளை களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து, பொள்ளாச்சி உட்கோட்ட மின்வாரிய அதிகாரிகள் சார்பில் மின் கம்பங்களை ஒட்டியுள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பணி கள் ஞாயிறன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி ஏ,டி,எஸ்,சி திரையரங்கு எதிரே உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் அருகே உள்ள மின் கம்பத்தை ஒட்டி இருந்த மரக்கிளைகளை அப்புறப் படுத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்ட னர்.