சேலம், மே 14- விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வேளாண் கூட்டு றவு சங்க தலைவரை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், கவர்க்கல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தில் பயிர்க்கடன் பெற்றவர்களின் பெயர்களை பயன்படுத்தி, அவர்க ளுக்கு தெரியாமலேயே வங்கியில் கடன் பெறப்பட்டுள்ளது. இத னைத்தொடர்ந்து பயிர்க்கடன் மற் றும் எம்டி கடன் ஆகியவற்றை தள் ளுபடி செய்ய வேண்டும். எம்டி கடன் மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத்தொ டர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கு எவ்வித கடனும் வழங்காமல் பழிவாங்கும் நோக் கத்துடன் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, விவசாயிகள் சங்க தாலுகா நிர்வாகி செல்வகுமார், கூட் டுறவு சங்க பொறுப்பு செயலாளரி டம் பயிர்க்கடன் குறித்து பேசி உள் ளார். அப்போது அங்கிருந்த வங்கி அதிகாரி, ஜாமீன் கொண்டு வந்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என் றும், அதிமுகவைச் சேர்ந்த கூட்டு றவு சங்க தலைவர் குமரவேல், கொலை மிரட்டல் விடுவிக்கும் வகையில் பேசியுள்ளார். மேலும், பயிர்க்கடன் பெற ரூ.5 ஆயிரத்திற் கும் மேல் லஞ்சம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கவர்க்கல்பட்டி கூட்டு றவு சங்க அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசா யிகள் சங்க வட்ட தலைவர் வி.பழனி முத்து தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராம மூர்த்தி, மாவட்ட தலைவர் ஏ.அன்ப ழகன், மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு, மக்கள் சமூகநீதி பேரவையின் மாநில பொருளாளர் சுமதி, மாவட்ட நிர்வாகிகள் பச்ச முத்து, நாகராஜ் உட்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.