சேலம், ஏப்.27- சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து, விசா ரணை குழு விசாரித்து வருகிற நிலையில், இந்திய மாணவர் சங்கத் தினர் நேரில் சென்று விளக்கம் அளித்தனர். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தொடர்ச்சியாக ஊழல் முறைகேடு, ஆசிரியர் பணி நியமன ஊழல், மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் ஒடுக்குதல், பாலியல் அத்துமீறல்கள், சாதிய பாகு பாடுகள் உள்ளிட்ட ஏராளமான புகார்கள் நடைபெறுவதாக இந்திய மாணவர் சங்கம் ஆதாரத்தோடு புகார் தெரிவித்திருந்தது. இது குறித்து, பலமுறை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் முறையிட்டு மனுவும் அளித்தனர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு, உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் சு.பழனிசாமி தலை மையில் விசாரணை குழுவை அமைத்தனர். இதன்தொடர்ச்சியாக, மாணவர் சங்கத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணனை விசாரணை குழுவில் நேரில் ஆஜ ராக சொல்லி சம்மன் அனுப்பப் பட்டிருந்தது. இதன் அடிப்படை யில் நேரில் ஆஜராகி பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள், ஆசிரியர் பணி நியமன விதிமீறல் உள்ளிட்ட ஏராளமான புகார்கள் மீது இந்திய மாணவர் சங்கம் சார்பில் கருத்து களும் விளக்கங்களும் தெரிவிக்கப் பட்டது.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தினர் அளித்த விளக்கங் களில் குறிப்பாக, பல்கலைக்கழ கத்தில் பதிவாளராக பணியாற்றி வரும் தங்கவேல் என்பவர் மீது ஏராளமான ஊழல் முறைகேடுகள் குறித்து புகார்கள் உள்ளது. இதன் பேரில் தமிழ்நாடு அரசு விசாரணை குழு அமைத்துள்ளது. ஆனால் அவர் தற்பொழுது வரை பதிவாள ராக தொடர்வதால், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள சாட்சிகள், ஊழல் முறைகேடு, புகார்கள் பற்றிய ஆவ ணங்களை கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, பதி வாளரை அப்பொறுப்பில் இருந்து உடனடியாக அவரை நீக்க வேண்டும் என்று விசாரணை குழு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். பல்கலைக்கழக அனு மதியின்றி மாணவர்கள் செய்தியா ளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி யரை சந்தித்து மனு கொடுத்தார் கள் என்பதால், நான்கு மாணவர் களின் மாற்றுச் சான்றிதழில் திருப்தி இல்லை என்று பதிவாளர் மற்றும் துணைவேந்தர் குறிப் பிட்டு இருந்தனர். இதனை மாண வர்கள் கேள்வி கேட்ட பொழுது அந்த புகார் மனுவை திரும்ப பெற் றால் மட்டுமே மாற்றுச் சான்றிதழில் திருத்தி தருவோம் என்று மிரட்டி உள்ளனர். சில குறிப்பிட்ட பேராசிரியர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் களில் ஒரு மாணவரைக் கூட தனது நெறியாளராக கொடுக்கப்பட வில்லை. அதேபோன்று பல் கலைக்கழக URF கல்வி உதவி தொகையை சமூக நீதி அடிப்படை யில் வழங்காமல் இருப்பது தெரிய வருகிறது.
மேலும், மாணவர்கள் பேரா சிரியர்கள் ஊழியர்கள் பல்கலைக் கழக அனுமதியின்றி பத்திரிகை யாளர்களையோ, செய்தியாளர் களையோ, மாவட்ட ஆட்சிய ரையோ மற்ற அமைப்பினரையோ சந்திக்க கூடாது என்று பதிவாளர் மற்றும் துணைவேந்தர் சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கு புறம் பாக ஆணையை பிறப்பித்தனர். இவ்வாறு தொடர்ச்சியாக பேரா சிரியர், மாணவர், ஊழியர் விரோத போக்கு, ஊழல் முறைகேடுகள் குறித்து எதுவும் வெளிவரக் கூடாது என்ற நோக்கத்தோடு பெரி யார் பல்கலைக்கழகம் தொடர்ச்சி யாக செயல்பட்டு வருவதை கருத்தில் கொண்டு பதிவாளர், துணைவேந்தர் மற்றும் சம்பந்தப் பட்ட பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய விசாரணைக் குழு தமிழ் நாடு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என விசாரணைக் குழு அலுவலர் உயர்கல்வி துறை கூடுதல் செயலாளர் சு.பழனிசாமி யிடம் மாணவர் சங்கத்தின் முன் னாள் மாநிலத் தலைவர் ஏடி.கண்ணன், மாவட்ட செயலாளர் சே. பவித்ரன் ஆகியோர் தெரிவித் துள்ளனர். முன்னதாக, விசாரணைக் குழுவின் முன் ஆஜராக, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் ரம்யா, மாவட்டத் தலை வர் வீ.அருண்குமார், மாவட்ட துணை செயலாளர் டார்வின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோகுல், உத்தம்சிங், மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.