districts

img

மக்களின் கவனத்தை ஈர்த்த மாணவர் பேரவை தேர்தல்

கோவை, செப்.9- மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி யில் மாணவர் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பத விக்கான தேர்தல், பொதுத்தேர்தலைப்போல, மின் னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலமாக நடைபெற்றது. கோவை மாவட்டம், மசக்காளிபாளையம் மாநக ராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் பள்ளி  மாணவர்களுக்கான தேர்தல் நடைபெறுவது வழக் கம். இந்நிலையில், இந்த ஆண்டு மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் கோயம்புத்தூர் ராக் அமைப்பின் நிதி  உதவியுடன் தேர்தலுக்கான நடைமுறை துவங்கியது. கடந்த வாரத்திலேயே மாணவர்களுக்கு இதில் வாக்க ளிக்கும் முறை விளக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஜன நாயக முறைப்படி தேர்தல் நடக்கும் வழிமுறைகளை அறிவதோடு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் எவ் வாறு செயல்படுகிறது, எவ்வாறு வாக்களிப்பது போன்ற வழிமுறைகளை விளக்கப்பட்டது. இந்நிலையில், திங்களன்று பள்ளி மாணவர் தலை வர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடை பெற்றது. அதில், 9 மாணவர்கள் வேட்பாளராக போட்டி யிட்டனர். இதில், எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை யிலான 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மாணவர்களே செயல்பட்ட னர். வேட்புமனுத் தாக்கல் துவங்கி, பிரச்சாரம், வாக்க ளிப்பது உள்ளிட்ட என அனைத்துமே பொதுத்தேர்த லில் இருப்பது போல கடைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.