districts

img

சொத்து வரி உயர்வை கைவிடக் கோரி சிபிஎம் மனுக் கொடுக்கும் போராட்டம்

திண்டுக்கல், மே 12- அரசு சிமிண்ட் பொதுமக்க ளுக்கு சந்தையில் கிடைக்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டுமான பரிந்துரை அமைப்  பான சி.என்.ஐ. கேட்டுக்கொண்டுள் ளது.  கட்டுமானங்களின் பரிந்துரை அமைப்பான சி.என்.ஐ. திண்டுக்கல் கிளை துவக்க விழா வியாழனன்று நடைபெற்றது. இதில் நிறுவன தலை வர் உதயகுமார், திண்டுக்கல் பி.எஸ். என்.ஏ பொறியியற் கல்லூரியின் சார்பு தலைவர் ரகுராமன், அணில் புட்ஸ் நிர்வாக இயக்குநர் கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் பகுதி யைச் சேர்ந்த கட்டுமான உறுப்பின ராக சேர்ந்தவர்களாக 30 பேர்கள் பாராட்டப்பட்டனர். பின்னர் செய்தி யாளர்களிடம் உதயகுமார் பேசு கையில், கட்டுமான துறைக்காக அமைக்கப்பட்ட ஒரு வர்த்தக நிறு வனம் சி.என்.ஐ.. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முதலாக துவங்கப்பட்டுள்ளது. சென்னை யை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 27 கிளைகள் தொடங்கி செயல்பட்டு  வருகிறது 27 ஆவது கிளையாக  திண்டுக்கல்லில் தொடங்கப்பட்டுள் ளது. பொதுமக்களுக்கு குறைந்த செலவில் வீடுகள் கட்டி கொடுப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கம். அதன் படி 2021 இல் 108 கோடி ரூபாய் அள வுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டில் 500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்த தயக்கமும்  இன்றி எங்கள் நிறுவன உறுப்பி னர்களிடம் கட்டுமானத்திற்கு அணு கலாம். சிமெண்ட் ஸ்டீல் உள்ளிட்ட வைகளின் உற்பத்தியை அரசு அதி கரிக்கச் செய்து கட்டுமானப் பொருட்  களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அரசு சிமிண்ட்டை சந்தைப்படுத்த வேண்டும். அப்போது தான் தனி யார் நிறுவனங்கள் சிமிண்ட் விலையை குறைக்க முன்வரு வார்கள். அரசு சிமிண்ட் பொது மக்க ளுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரி வித்தார்.               (ந.நி)