சேலம், செப். 7- மயான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும், தார்ச்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்த போராட்டம் வெற்றியடைந்துள்ளது. இதுகுறித்து சேலம் ஆத்தூர் சிபிஎம் தாலுகா செயலாளர் முருகே சன் கூறுகையில், துலுக்கனூர் மயா னத்திற்கு செல்லும் சாலை மற்றும் மயான ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், அப்பம்மா சமுத்திரம் ஊராட்சி பாண்டியன் ரைஸ்மில் முதல் ஏகேஜி நகர் வரை செல்லும் சாலை 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. உடனடியாக அங்கு தார்சாலை அமைக்க வேண்டும், ராமமூர்த்தி நகர் கல்லு கட்டு பகுதியில் குடி யிருக்கும் வீடுகளுக்கு மனை பட்டா கொடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சி தொடர் போராட்டத்தை நடத்தியது. இதில் எந்த தீர்வும் எட் டப்படவில்லை. இதனைத்தொ டர்ந்து, கடந்த 29 ஆம்தேதி ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி பொதுமக்களை திரட்டி காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டோம். இதனையடுத்து, கோட்டாட்சியர் தலைமையில் பேச் சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் ப.செல்வசிங், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.குணசேகரன், தாலுகா செயலாளர் ஏ.முருகேசன், தாலுகா குழு உறுப்பினர்கள் ஆர். வெங்கடாசலம், எஸ்.பிரபு, தங்கம் மாள், கே. பெரியண்ணன், சி.மாரி முத்து உள்ளிட்டோர் பங்கேற்ற னர். மேற்கண்ட பேச்சுவார்த்தை யில், வருவாய் கோட்டாட்சியர் உறு தியளித்ததுபோல, தற்போது, துலுக்கனூர் சுடுகாட்டிற்கு செல் லும் சாலை மற்றும் சுடுகாடு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றும் விதமாக வட்டாட்சியர் பாலாஜி தலைமை யில், நில அளவீடு செய்யபட்டுள் ளது. இதேபோன்று, அப்பம்மா சமுத்திரம் பாண்டியன் ரைஸ்மில் முதல் ஏகேஜி நகர் வரை தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. ராமமூர்த்திநகர், கல்லுகட்டு பகுதியில் குடிமனை பட்டா கொடுக்க, நிலம் அளவீடு செய்யப் பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தால் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறை வேறியுள்ளது என்றார். முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்த போராட்டத்தால் தங் கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்த மகிழ்ச்சியை வெளிப் படுத்திய மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு நன்றியை தெரி வித்தனர்.