districts

img

பேரூராட்சிக்கு விரிவுபடுத்தப்பட்ட நூறுநாள் வேலை விவசாய தொழிலாளர்கள் சங்க போராட்டம் வெற்றி

சேலம், மார்ச் 7- விவசாய தொழிலாளர் சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டத்தால், சேலம் காடையாம்பட்டி பேரூராட்சி யில் விவசாய தொழிலாளர்களுக்கு நூறுநாள் வேலை கிடைத்தது. அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை பேரூ ராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த  வேண்டும் என தொடர்ச்சியான போராட் டம் நடத்தப்பட்டு வந்தது. இந்த போராட்டத்தின் விளைவாக தற்போது சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பேரூராட்சியில் விவசாய தொழிலா ளர்களுக்கு 100 நாள் வேலை திட்டம் வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திங்களன்று பேரூராட்சி ஆணையாளர் 100 நாள் வேலை திட்ட பணிகளை துவக்கி வைத் தார். இந்நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.கணபதி, மாவட்ட தலைவர் வி.தங்கவேல், மாநில நிர்வாகி சின்ராஜ் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.