districts

img

டாஸ்மாக் கடையை இடமாற்றக் கோரி சிபிஎம், சிபிஐ அறிவித்த போராட்டம் வெற்றி

ஈரோடு, ஆக. 20- கொடுமுடி பேருந்து நிலையப் பகுதியில் செயல் பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக் கோரி சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக, மதுபான கடையை இடமாற்றம் செய்வது என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி புதிய பேருந்து நிலை யத்தின் அருகில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகி றது. இதனை இடமாற்றம் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பலமுறை மனு அளிக்கப்பட்டது. சம்பந்தபட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் செவ்வாயன்று உண் ணாவிரத போராட்டத்திற்கு இரு கட்சிகளும் அழைப்பு விடுத்தது.  இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கொடுமுடி பேரூராட்சி செயல் அலு வலர் (பொ), மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் செயல் அலுவலர், காவல் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர், நில வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வா கிகள் அமிர்தலிங்கம் மற்றும் குணசேகரன் ஆகியோர் தங்க ளது கோரிக்கைகளைத் தெரிவித்தனர். அதனடிப்படையில், கொடுமுடி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை ஒரு மாத காலத்திற்குள் புதிய இடம் தேர்வு செய்து மாற்றியமைப்பது. கொடுமுடி பேரூராட்சியில் நடைபெறும் சுங்க வரி குறித்த விபரம் அறிவிப்பு பலகை வைப்பது. பேருந்து நிலைய கழிவறை மற்றும் கோவிலுக்கு அருகில் உள்ள கழிவறை யில் கட்டண விபரம் குறித்து அறிவிப்பு பலவை வைக்கப்ப டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.