districts

img

அதிமுக - பாஜக இடையே ரகசிய உறவு தொடர்கிறது

கோவை, பிப்.11- அதிமுக - பாஜக இடையே ரகசிய உறவு தொடர்கிறதென கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் எம்.பி., தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந் தநாளை முன்னிட்டு, மாநிலம் முழுவ தும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட் டன. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக  விளையாட்டு அணி சார்பில் பரிசளிப்பு  விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங் கும் விழா, கோவைபுதூர் மைதானத் தில் நடைபெற்றது. திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலச் செயலா ளர் தயாநிதிமாறன் எம்.பி., தலைமை  வகித்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு  பரிசுகளை வழங்கினர். அப்போது அவர்  பேசுகையில், அமைச்சர் செந்தில்பாலா ஜியை அதிமுகவும், பாஜகவும் வெற்றி  பெற வேண்டுமென்றே சிறையில் வைத் துள்ளனர், என்றார். மேலும், “இதுநாள் வரைக்கும் பாஜகவுடன் தான் கூட்டணி யில் இருந்தீர்கள். கடந்த 5 ஆண்டுக ளாக நாடாளுமன்றத்தில் வாயை திறந் துள்ளீர்களா? ஒரு கேள்வி கேட்டுள்ளீர் களா? என அதிமுகவிற்கு கேள்வி எழுப் பினார். திமுக நாடாளுமன்றத்திற்குள் சென்றவுடன் தலைகீழாக உள்ளது. அந்த அளவிற்கு கேள்விகளை தமிழ் நாட்டிற்கு கேட்டுள்ளோம். பாஜக கடந்த  10 ஆண்டுகளில் மதவெறி அரசியலை கையாண்டு வருகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மதவெறி கலாச்சாரம் நடக் காது. நாம் கட்டும் வரி பணத்தை நமக்கு  முழுமையாக ஒன்றிய அரசு கொடுப் பதில்லை. பால், வெண்ணை எது வாங்கி னாலும் வரி கட்டனும். நாம் ஒரு ருபாய்  கொடுத்தால் 29 பைசா தான் ஒன்றிய அரசு கொடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு எதி ரானவர்கள் பாஜக. அதற்கு துணை நிற்ப வர்கள் தான் அதிமுக. செந்தில் பாலாஜி  மீது பொய் வழக்கு போட்டு கைது செய் தார்கள். ஆனால், கூட்டணியை விட்டு வெளியே வந்த பின்னும் எடப்பாடி பழ னிச்சாமி மீதும், வேலுமணி மீதும் ஏன்  இன்னும் வருமானவரி, அமலாக்க துறை சோதனை செய்யவில்லை. அவர் கள் மீதும் பல வழக்குகள் நிலுவையில்  உள்ளன. நாங்கள் வெளியே வந்தது மாதிரி நடிக்கிறோம். நீங்களும் அப்ப டியே நடியுங்கள் என கூறிவிட்டு, அதி முக – பாஜக இடையே ரகசிய உறவு உள்ளது. இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்தார்.