districts

img

கொளுத்தும் வெயிலும், பனை மரங்களின் தேவையும்

நிழலின் அருமை வெயிலில் நடப்ப வருக்கே தெரியும்” என்கிற சொல வாடை தமிழ்நாட்டில் புழக்கத்தில் உண்டு. அதேபோல கொளுத்துகிற வெயிலின் உக்கரத்தில் இருந்து பாது காக்க இளநீர், நொங்கும், தண்ணீர்ப்பழ மும் (தர்பூசனி) தவிர்க்க முடியாததாக உள்ளது. கோடைகாலம் துவங்கி விட் டாலே நமக்குள் ஒரு இனம் புரியாத எரிச்ச லும் தவிப்பும் உண்டாகும். வெளியே செல்வதற்கே ஒரு விதமான தயக்க நிலை ஏற்படும்.  அதுவும் அக்னி நட்சத்திரம் நாளில், சொல்லவே தேவையில்லை. வெயில்  வாட்டி வதைக்கும். எப்பொழுதும் ஏப்ரல், மே மாதங்களில் காணப்படும் அதிக  அளவு வெயில் தற்போது பிப்பரவரியி லேயே துவங்கிவிட்டது. மார்ச் மாதத்தி லேயே உக்கிரமாய் இருக்கிறதே, ஏப் ரல், மே மாதங்களில் எப்படி இருக்குமோ என்கிற அச்சம் எழாமல் இல்லை. கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்க ளின் பார்வை இயற்கை பானங்கள் மீது திரும்பி உள்ளது. நுங்கு, இளநீர், வெள்ளரிக்காய், தர் பூசணி பழம் உள்ளிட்டவைகளை பொது மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் பிரதான சாலையோர கடை களில் நுங்கு விற்பனை  அதிகரித்து வரு கிறது. நுங்கை பொருத்தவரை அதற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க விஷயங்கள் இருப்பதை இந்த தலைமுறை அறிந் திருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம் என்பது இன் றைய தலைமுறையினர் பெரும்பான் மையோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அழிந்து வரும் மரங்களில் பனைமரமும் உள்ளது. பனை மரங்கள் தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடி யாமல் தவித்து வருகிறது

தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டு, விவசாய நிலங்கள் வீட்டுமனை நிலங் களாக மாறி நிலையில், கால நிலை மாற் றத்தில் பனை மரமும் மெல்ல அழிந்து  வருகிறது. பனை மரத்தில் இருந்து கிடைக் கும் நுங்கு வெயில் காலத்தில் நம்மை பாதுகாக்க இயற்கை அளித்த கொடை யாகும். உடலில் சூட்டை குறைத்து நீர்ச் சத்துகளை அளிப்பதில் நுங்கு முதலி டத்தை பெறுகிறது. அதேபோல பனை மரத்திலிருந்து வரும் பதநீர் நமது ஊர் சீதோசன நிலைக்கு ஏற்ப மிகச்சிறந்த பானம் என்பதில் மாற்று கருத்து இல்லை. உடல் சூட்டை முழுமையாக உடனடி யாக குறைத்து உடலை குளிர வைக்கும் தன்மை கொண்டது பதநீர். கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக் கும் தன்மையும் நுங்குக்கு உண்டு. இப் படி பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பனைமரங்கள் தற்போது மிக சொற்ப அளவிலே இருப்பதாக நுங்கு  விற்பனையில் ஈடுபட்டு வரும் வியாபாரி கள் தெரிவிக்கின்றனர். 

பள்ளிபாளையம் பிரதான சாலையில் கடை அமைத்து நுங்கு விற்பனை செய்து  வரும் மாரிமுத்து கூறும்போது, நாங்கள் சங்ககிரியில் இருந்து வருகிறோம். சொந்த ஊர் பள்ளிபாளையம் தான். தற் போது கோடை காலம் துவங்கி உள்ள தாலும்,  நுங்கின் மகத்துவத்தை புரிந்து  கொண்ட பொதுமக்கள் பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். ஆனால் கடைசி  ஐந்து ஆண்டுகளில் தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டு அதனுடன் பனை மரங்க ளும் அதிக அளவு வெட்டப்படுவதால், தற் போது நுங்கு கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. வழக்கமாக கோடை காலத் தில் அதிகளவு நுங்கு விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்திருக்கும். பல்வேறு இடங்களில் எங்கள் உறவினர்கள் உட் பட பலரும் நுங்கு கடைகளை அமைத்து வியாபாரம் பார்ப்போம். தற்போது நுங்கு  மிக குறைந்த அளவிலே கிடைப்பதால், தேவை இருந்தும் நுங்கு கிடைக்காத நிலை உள்ளது, என்றார்.

பனை மரத்தை முழுமையாக பாது காக்காவிடில் அழிந்து வரும் மரங்களில் ஒன்றாக நமது பனைமரமும் இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. ஒன்றிய, மாநில அரசுகள் தொலை நோக்கு பார்வையுடன் மக்களின் தோழ னான பனை மரத்தை பாதுகாக்கும் பொருட்டு, பனை மர விதை திருவிழா போன்றவற்றை நடத்தி, நீர்நிலைகளில் பனைமரம் வளர வாய்ப்புள்ள அனைத்து பகுதிகளிலும் பனை மர விதைகளை நடுவதற்கு முயற்சிக்க வேண்டும். தற் போது, ஆங்காங்கே சூழலியல் ஆர்வ லர்கள் இதுபோன்ற பனை விதை திரு விழாக்களை நடத்துகிறார்கள் என்றா லும், இதுபோதாது, அரசே விரிந்த அள விலான இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் நமது தமி ழகத்தின் மாநில மரமாக இருக்கக்கூடிய பனை மரத்தை காப்பாற்ற முடியும்.  மாநில மரம் காக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என்பதே அனை வரின் எதிர்பார்ப்பாகும்.

-பிரபாகரன்