districts

img

இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டடம்

தருமபுரி, ஆக.23- அரசுப் பள்ளியில் கட்டடம், கழி வறை பூட்டியே உள்ளதால் மாண வர்கள் அச்சத்திலே பயிலும் நிலை  ஏற்பட்டுள்ளது.  தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி வட்டத்திற்குட்பட்ட பால ஜங்கமனஹள்ளி கிராமத்தில் அரசுத்  தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசுத் தொடக்கப்பள்ளியில் 80 மாணக் கர்களும், உயர்நிலைப் பள்ளியில் 124 மாணக்கர்களும் பயின்று வரு கின்றனர். இங்கு சுற்றுவட்டார கிராம பகுதிகள் அதிகம் என்பதால்  பத்து ஆண்டுகளுக்கு முன்பே இப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. ஆனால், இன்று வரை அவற்றுக்கான கூடுதல் கட்டடங்களோ, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை அமைக் கப்படவில்லை. கட்டடம் மற்றும் வகுப்பறை பற்றாக்குறை,  இட பற் றாக்குறையால் இப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாண வர்கள் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள உயர்நிலை பள்ளிக்கு செல் கின்றனர். இதனால் சேர்க்கை விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்பள்ளியில் முக்கிய பிரச்ச னைகளாக பழைய கட்டடங்களில் இருந்து கான்கிரீட் மேல் தளங்கள் தினம் தினம் இடிந்து விழுந்து வருகின்றது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்துடனே பள்ளிக்கு வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகுவதால் மிகுந்த சிரமத்திற்கு  உள்ளாகி வருகின்றனர். மேலும்,  பள்ளியில் மாணவ, மாணவி களுக்கு கழிவறை வசதியில்லை. மாணவர்களுக்கான கழிவறைகள் கட்டப்பட்டிருந்தாலும் தண்ணீர் வசதி இல்லாததால் பல ஆண்டு களாக பூட்டப்பட்டு இருக்கின்றன.

இதனால் மாணவர்கள் இயற்கை உபாதைகளுக்காக அருகில் உள்ள  ஏரிகள் முட்புதர்கள் மற்றும் மறை வான இடங்களுக்கு சாலையை தாண்டி செல்ல வேண்டிய நிலை தான் தினம்தோறும் நடந்தேறி வருகிறது. குறிப்பாக, மாணவிகளுக்கு கழிவறைகள் இல்லாததால் மிகுந்த  சிரமம் அடைந்து வருவதன் காரண மாகவே பெண் குழந்தைகளை இப் பள்ளியில் சேர்வதை பெற்றோர் கள் தவிர்த்து வருகின்றனர். அவ் வாறு ஓரிரு மாணவிகள் இப் பள்ளியில் சேர்ந்தாலும் கழி வறையை பயன்படுத்த வேண்டும் என்றால் தங்கள் வீடுகளுக்கு சென்று பயன்படுத்திவிட்டு வர வேண்டிய சூழலும் இப்பள்ளியில் நிலவி வருகிறது. அரசு பள்ளியில் ஆசிரியர்கள் சிறந்த தேர்ச்சி விகி தத்தை கொடுத்தாலும் இது போன்ற இன்னல்களால் பலரும் அரசு பள்ளியை தவிர்த்து வருகின் றனர்.  கிராமப்புறங்களில் திறமை யான ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள்  கிடைக்காமல் இருப்ப தாலே பல மாணவர்கள் இடை நிற்றல் மற்றும் உள்ளூரில் உள்ள  பள்ளிகளை தவிர்த்து விட்டு தொலைவில் உள்ள மற்ற பள்ளி களுக்கு செல்லும் நிலை தொடர்ந்து  வருகிறது. இவற்றை தமிழ்நாடு அரசும், பள்ளி கல்வித்துறை கவ னத்தில் கொண்டு மாணவர் களுக்கான அடிப்படை வசதி களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும், இப்பள்ளியில் தினந்தோறும் இடிந்து விழும் கட்ட டத்தை இடித்து விட்டு புதிய கட்ட டங்கள் கட்டி குடிநீர் மற்றும் கழிப் பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என  மாண வர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.