districts

img

எல்ஐசி பங்குகளை விற்பது தேச விரோதம் இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

கோவை, மே 4– எல்ஐசி பங்குகளை விற்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து எல்ஐசி ஊழியர் கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். கார்ப்ரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட மக்களின் சேமிப்பை சூறையாடும் முயற்சியாக எல்ஐசி பங்குகளை தனியா ருக்கு விற்க ஒன்றிய பாஜக அரசு துவங்கி யுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவ தும் புதனன்று இரண்டு மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அறைகூவல் விடுத்தது.  இதன்ஒருபகுதியாக, கோவையில்  அனைத்து இன்சூரன்ஸ் அலுவலகங்களி லும் காலை 11.30 மணிமுதல் 1.30 மணி வரை இரண்டு மணி நேர வெளிநடப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் இன்சூரன்ஸ் ஊழி யர்கள் ஈடுபட்டனர். அப்போது, எல்ஐசி பங்குகளை விற்கக் கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை சீர்குலைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எல்ஐசி பங்கு களை விற்பது தேசதுரோகம் என குற்றஞ் சாட்டி ஆவேச முழக்கங்களை எழுப்பி னர். கோவை – திருச்சி சாலையில் உள்ள இன்சூரன்ஸ் கோவைப்பகுதி தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவைப்பகுதி தலைவர் எம்.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச்செயலாளர் எம்.கிரிஜா, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச் செயலாளர் வி.சுரேஷ், கோவை பகுதி செய லாளர் துளசிதரன் உள்ளிட்டோர் பங் கேற்று உரையாற்றினர். கோவையில் நூறு சதவிகித இன்சூரன்ஸ் ஊழியர்களும் ஒன் றிய பாஜக அரசை கண்டித்து வெளிநடப்பு  மற்றும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

சேலம்
சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள எல்ஐசி கோட்ட அலுவலகத்தில் சங்கத்தின்  கோட்ட தலைவர் ஆர்.நரசிம்மன் தலைமை யில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி கோட்ட பொதுச்செயலாளர் ஆர். தர்மலிங்கம் உரையாற்றினார். இதில், நிர் வாகிகள் கலியபெருமாள், எம்.கே.கலைச் செல்வி, ஆர்.ரவீந்திரன், சுவாமிநாதன் உள் ளிட்ட சேலம் நகரில் உள்ள அனைத்து கிளை களிலும் உள்ள ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். 

தருமபுரி

தருமபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங் கத்தின் சார்பில் இரண்டு மணி நேர வேலை நிறுத்தம் மற்றும் வெளிநடப்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். இதில், கோட்ட இணைச் செயலாளர் ஏ.மாதேஸ்வரன், கிளைச் செய லாளர் சந்திரமொளலி, பொருளாளர் நடரா ஜன் உட்பட திரளானோர் கலந்து கொண்ட னர்.