districts

img

தருமபுரி: இடிந்து விழும் நிலையில் பேருந்து நிலைய மேற்கூரை

தருமபுரி, ஜன.19- தருமபுரி நகரின் மையப் பகுதியில் இராஜகோபால் பேருந்து நிலையம் சுமார் 43 ஆண்டுகளுக்கு முன் கட் டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும் நூற் றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. குறிப் பாக பெங்களூர், திருப்பதி, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங் களுக்கு நேரடி பேருந்து வசதியும் உண்டு. தினமும் ஆயி ரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், தருமபுரி நகராட்சிக்கு சொந்தமான 400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம்  வாடகை வசூல் செய்து வருகிறது. இந்த பேருந்து நிலை யத்தில் கடைகளின் மேற்கூரை மற்றும் பயணிகள் அமரும் இடத்தில் உள்ள கான்கிரிட் மேற்கூரைகள் பழுதடைந்து  அவ்வப்போது இடிந்து கீழே விழுகிறது. இதனால் கடையின் பணியாளர்களும், பயணிகளும் அச்சத்துடனே இருக்கும் நிலை இருந்து வருகிறது. சுகாதார சீர்கேடு மேலும், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற் படுத்தி வருகிறது. இச்சீர்கேடுகளை கண்டு பயணிகள் முகம் சுழிக்கின்றனர். இதேபோல், சிறு மழை பெய்தால் கூட பேருந்து நிலையத்திலிருந்து மழைநீர் வெளியேற வழி யில்லாமல் குளம் போல் தேங்குகிறது. இதனால் பயணிகள் மழை நீரை கடந்து பேருந்து ஏறி செல்ல சிரமப்படுகின்ற னர். எனவே, இந்த பேருந்து நிலையத்தை சீரமைக்கவும், சுகாதார சீர்கேடுகளை களையவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பேருந்து நிலைய கடை உரிமைதாரர்களும், பயணிகளும் கோரிக்கை விடுக் கின்றனர்.