தருமபுரி, நவ. 7- நவம்பர் புரட்சிதினத்தையொட்டி நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் எழுச்சிக ரமான இயக்கங்களை முன்னெடுத்தனர். 1917 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி லெனின் தலைமையில், விவசாயிகள், தொழி லாளர்கள் இணைந்த வர்க்கப்போராட் டத்தால் ரஷ்யாவில் புரட்சி மலர்ந்தது. இப் புரட்சியின் தாக்கம் இந்தியா உட்பட உலகம் முழுவதுமுள்ள விடுதலைப் போராட்ட சக்தி களுக்கு உத்வேகம் அளித்தது. இந்நாளை உலகம் முழுவதும் உள்ள பொதுவுடை மைவாதிகள், தொழிலாளி வர்க்கத்தினர், விவசாயிகள் எழுச்சியோடு கொண்டாடி வரு கின்றனர். இதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் புரட்சிதின கொண்டாட்டம் நடை பெற்றது. இதன்தொடர்ச்சியாக, நவம்பர் புரட்சி தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உட்பட மாவட்டம் முழுவதும் கொடியேற்று விழா நடைபெற்றது. தருமபுரி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத் தில் நடைபெற்ற கொடியேற்று விழா வுக்கு நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அ.குமார் கொடியேற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அருச்சு னன், எஸ்.கிரைசாமேரி, ஆர்.மல்லிகா மற் றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் திரளா னோர் பங்கேற்றனர்.
சேலம்
சேலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காரல் மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்து கொடி யேற்றி இனிப்புகள் வழங்கி நவம்பர் புரட்சி தினம்கொண்டாடப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா செங்கொ டியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். குணசேகரன் புரட்சி தின உரையாற்றினார். காரல் மார்க்ஸ் சிலைக்கு மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சேது மாத வன், ஆர்.குழந்தைவேல் மாலை அணி வித்தனர். இதில் திரளானோர் பங்கேற்ற னர். சேலம் வடக்கு மாநகரக்குழு சார்பில் 8 மையங்களிலும் சேலம் கிழக்கு மேச் சேரி மேட்டூர் வாழப்பாடி சங்ககிரி ஏற்காடு பெத்தநாயக்கன்பாளையம், ஓமலூர், நங்க வள்ளி உள்ளிட்டு சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற் றது.
கோவை
நவம்பர் புரட்சி தினம் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக கொண்டாடப்பட்டது. கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற நவம்பர் புரட்சிதின விழாவிற்கு என்.ஜெய பாலன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன் செங்கொடியை ஏற்றி வைத்தார். நவம் பர் புரட்சிதின உரையை செயற்குழு உறுப்பி னர் யு.கே.சிவஞானம் உரையாற்றினார். இதில், மூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். ஈரோடு நவம்பர் புரட்சிதின விழா ஈரோடு மாவட் டத்தில் பல்வேறு பகுதிகளில் எழுச்சிகரமாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் சி.ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற கொடியேற்றுவிழாவில், மார்க்சிஸ்ட் கட்சி யின் செங்கொடியை மூத்த தோழர் கே.துரை ராஜ் ஏற்றி வைத்தார். இதில், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்டக் குழு உறுப்பினர் எச்.ஸ்ரீராம், நகரச் செயலா ளர் சுந்தரராஜன், எம்.அண்ணாதுரை மற்றும் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு நகரக்கமிட்டி அலுவலகம், சூரம் பட்டி, வீரப்பன்சத்திரம், ஜான்சி நகர், பெரியவலசு, கமலா நகர், மாணிக்கம்பா ளையம் உள்ளிட்டு மாவட்டம் முழுவதும் பர வலாக நவம்பர் புரட்சி தினம் கொண்டாடப் பட்டது.