உடுமலை, ஆக.30- பழிவாங்கும் நோக்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட கள்ளக் குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியனுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உடு மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழி யர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். உயர்நீதி மன்ற தீர்ப்பின்படி கள்ளக்குறிச்சி பகுதியில் ஆக் கிரமிப்புகளை அகற்றிய வட்டாட்சியரை இடைக்கால பணி நீக்கம் செய்து உள்ளதை கண்டித்தும், உடனடியாக அவ ருக்கு வேலை வழங்க வேண்டும். மேலும் அரசு வேலையை சரியாக செய்யும் ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் பாது காப்பு தர வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் வருவாய்த் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.