கோவை, ஜூலை 12- கோவை வஉசி பூங்காவில் கோவை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்த ஐந்து கடமான்கள் வெள்ளியன்று வனப் பகுதியில் விடப்பட்டது. கோவை வஉசி வன உயிரியல் பூங்கா விற்கு உயிரியல் பூங்கா அந்தஸ்து ஒன்றிய அரசால் மறுக்கப்பட்டது. இதனைத்தொ டர்ந்து அதில் பராமரிக்கப்பட்டுவரும் அட்ட வணை வன உயிரினங்களை வனப்பகுதியில் விடுவித்திட, முதன்மை தலைமை வன பாது காவலர் மற்றும் சென்னை தலைமை வன உயிரின காப்பாளர் ஆணை பிறப்பித் தார். இதனையடுத்து, கோவை வஉசி உயிரி யல் பூங்காவில் இருக்கும் அட்டவணை வன உயிரினங்களை மாற்றம் செய்திட தமிழக வனத்துறையினால் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, வஉசி பூங்காவில் பராமரிக்கப்படும் புள்ளி மான்களை கடந்த மே மாதம் மாற்றம் செய்யப்பட்டது. மேலும், பூங்காவில் உள்ள கடமான் மாற்றம் செய்ய திட்டமிட்டு அதன் புழுக்கைகள் ஆய்வகத் திற்கு அனுப்பப்பட்டது. பின்னர், கடமான்க ளுக்கு காசநோய் தொற்றும் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து அறிக்கை பெறப் பட்டது. பின்பு மார்ச் 2024 மாதம் முதல் மான்க ளுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங் கள் நிறுத்தப்பட்டு, கூடுதலாக பச்சைத் தீவ னங்கள் மற்றும் சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகை களை மான்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து இவைகளை வனப்பகு திக்கு மாற்றம் செய்திட ஏதுவாக, கோவை மாநகராட்சி மினி லாரி வாகனத்தில் வனத் துறை மூலம் கூண்டு கட்டமைக்கப்பட்டது. கடந்த 04.07.2024 அன்று ஐந்து கட மான்கள் போளுவாம்பட்டி சரக காப்புக்காட்டில் விடப் பட்டது அதன் தொடர்ச்சியாக வெள்ளியன்று கோவை மாவட்ட வன அலுவலரின் தலை மையில், கோவை மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில், ஐந்து கட மான்களை பிரத்தி யேக கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டது. பின் னர், சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சரகம் வனப்பகுதியில் மதியம் 12 மணி யளவில் விடப்பட்டது.