districts

img

வாலிபர் கொலை: உறவினர்கள் மறியல்

சேலம், ஏப்.27- முன்விரோதம் காரணமாக கணவரை கொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மறுத்து மனைவி மற்றும் அவரது உறவினர்கள் ஆட்சியர் அலு வலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த லோகேஸ் வரன் என்பவர் சேலம், அம்மாபேட்டையை அடுத்த உடையா பட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டி பகுதியில் வசித்து வந் தார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், இரண்டு மகன் களும் உள்ளனர். லோகேஸ்வரன் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தேநீர் கடையின் காசாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், வியாழனன்று இரவு  லோகேஸ்வரன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அதேபகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் லோகேஸ்வரனை கல்லால் தாக்கியுள்ளார். இதில் படுகாய மடைந்த லோகேஸ்வரனை அருகிலிருந்தவர்கள் அரசு மருத் துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வரும் வழியி லேயே லோகேஸ்வரன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த அம்மாபேட்டை காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், உயிரிழந்த வாலிபரின் உற வினர்கள் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்து வந்த மாநகர உதவி ஆணையாளர்கள் வெங்கடேஷ் மற்றும் ஆனந்தி, நகர காவல் ஆய்வாளர் பாபு ஆகியோர் மறியயில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்ட னர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு உடன்படாத பொதுமக்கள் தொடர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், முன் விரோதம் காரணமாக லோகேஸ்வரனை  மணிகண்டன் உள் ளிட்ட மூன்று பேர் கொலை செய்து விட்டனர். எனவே கொலை  செய்த மூன்று பேர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கைது  செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.