உடுமலை, ஜூலை 30- சட்ட விதிகளுக்குப் புறம்பாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவ சாய சங்கத்தினர் கணியூர் சார்பதிவா ளர் அலுவலகத்தில் செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்கு ளம் வட்டம், கணியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெறும் லஞ்ச ஊழலை கண்டித்தும், பத்திரப் பதி வுக்கு வரும் பொதுமக்களை மிரட்டி லஞ்ச பணம் பறிக்கும் கணியூர் சார் பதிவாளர் தாமோதரன் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மடத்துக்குளம் தாலுகா கமிட்டி சார்பில் கணியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்கத் தின் தாலுகா செயலாளர் எம்.எம். வீரப்பன் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் ஆர்.குமார், தாலுகா தலைவர் வி.ராஜரத்தினம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன் னாள் தாலுகா செயலாளர் ஆர்.வி. வடிவேல், விவசாயிகள் ஜெகநாத சாமி, தயானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினார். முன்ன தாக சார்பதிவாளர் அலுவலக முற் றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டி ருந்தது. பதிவுத்துறை மாவட்ட பதி வாளர், உடுமலை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தி நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித் ததை தொடர்ந்து முற்றுகை போராட்ட மாக நடத்தப்பட்டது. மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உடுமலை ஒன்றியச் செய லாளர் ராஜகோபால், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் அருண்பிரகாஷ், தாலுகாப் பொருளாளர் வெள்ளியங்கிரி, தாலுகா நிர்வாகிகள் கணேசன், அழ கேஸ்வரன், கணபதி, ராஜகோபால் உள்பட திரளான விவசாயிகள், பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.