districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியங் காட்டில் ரேசன் கடையை ஆள் நடமாட்டம் இல்லாத பாறைக் குழி பகுதிக்கு இடமாற்றம் செய்யக் கூடாது, சொத்து வரி  உயர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி  திங்க ளன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் ரமேஷ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இதில் மாநகரக் குழு உறுப்பினர்கள் பொம்மதுரை,  சந்திரசேகர், சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பி. பாலன் ஆகியோர் உரையாற்றினர். கட்சியின் தெற்கு மாநகரச்  செயலாளர் டி.ஜெயபால் நிறைவாக சிறப்புரை ஆற்றி னார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளியங்காடு பகுதி பொது மக்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.