நாமக்கல், நவ.29- பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், என வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45ம், எருமைப் பாலுக்கு ரூ.54ம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஆரம்ப சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும். இதற் கான தொகை 50 சதவிகிதத்தை ஆவின் ஒன்றியங்களில் வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன் றம் மதுரை கிளையின் தீர்ப்பின் படி, ஆரம்ப சங்கங்களிலிருந்து பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக பாலின் அளவையும், தரத் தையும் குறித்து கொடுக்க வேண் டும். கால்நடைகளுக்கு வருடம் இருமுறை பிப்ரவரி - ஆகஸ்ட் மாதங்களில் இலவச தடுப்பூசி போட வேண்டும். பாலுக்கான ஊக் கத் தொகையை இதர மாநிலங்க ளில் வழங்குவது போல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5யை தமிழக அரசு வழங்க வேண்டும். 50 சதவிகிதம் மானிய விலையில் மாட்டு தீவனம் வழங்க வேண்டும். இதுவரை ஆவி னுக்கு ஏற்பட்டுள்ள சுமார் ரூ.1000 கோடி இழப்பை தமிழக அரசு மானியமாக ஆவினுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றி யம், ஆயிபாளையம் பால் சொசைட்டி முன்பு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங் கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.பெருமாள், மாவட்ட உதவிச் செயலாளர் என்.ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி இதேபோன்று, தருமபுரி பால் வள ஒன்றிய அலுவலகம் முன்பு வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட் டத் தலைவர் கே.அன்பு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலா ளர் பி.பெருமாள், மாவட்டச் செய லாளர் எஸ்.தீர்த்தகிரி, விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுனன், மாவட்டத் தலை வர் எம்.குமார், துணைத்தலைவர் கே.என்.மல்லையன், பொருளா ளர் சி.வஞ்சி மற்றும் பால் உற்பத்தி யாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகி கள் என்.கந்தசாமி, சி.சிங்காரம், ஏ. நேரு, ஆர்.சின்னசாமி, டி.மனோ கரன், பி.பொன்னுசாமி, ஆர்.பாரதி தாசன் உட்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில், ஆவின் பொது மேலாளர் மாலதியிடமும், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளரிடமும் மனு அளிக்கப்பட்டது.