districts

img

குடிநீர் கேட்ட பொதுமக்களை ரவுடி என்பதா? சிபிஎம் கண்டனம்

அவிநாசி, மே 30- குடிநீர் கேட்டு மனு கொடுக்க வந்த பொதுமக்களை ரவுடி என கூறிய திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவருக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர்.  திருமுருகன்பூண்டி நகராட்சி மன்ற கூட்டம் தலைவர் குமார் தலை மையில், நகராட்சி ஆணையர் அப் துல் ஹாரிஸ் முன்னிலையில் நடை பெற்றது. இதில், நகர் மன்ற உறுப் பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக, நகராட்சி தலைவர் குமார், குடிநீர்  வழங்க கோரிய மக்கள் ரவுடிகளை  போல நடந்து கொள்கிறார்கள். வெளி யூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பிரச்சனையில் ஈடுபடுவதாக கூறி தலைவர் இருக்கையில் அமர்ந் தார். கோரிக்கை மனுக்களோடு வந்த  மக்களை ரவுடி என நகர் மன்ற தலை வர் அநாகரீகமாக பேசியது உறுப் பினர்களிடையே அதிர்ச்சியை ஏற் படுத்தியது. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நகர மன்ற உறுப்பினர்கள் சுப்பிர மணியம், தேவராஜன் கடும் கண்ட னம் தெரிவித்தனர். அவர்கள் பேசு கையில், ஜனநாயக ரீதியாக குடி நீரை முறையாக விநியோகிக்க வேண் டும் என்று முறையீடு செய்ய வந்த வர்களை ரவுடிகள் போல நடந்து கொண்டார்கள் என கூறுவதை ஏற் றுக்கொள்ள முடியாது. இதனை மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் கண்டிக்கிறோம். மேலும், வரவு-செலவு கணக்குகளை  உடனடியாக மன்ற கூட்டத்தில் வைக்க வேண்டும். வார்டு சபா கூட் டத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டும். ஆனால் நடைபெறவில்லை.  இதனை முறையாக நடத்தி இருந்தால் மக்கள் குடிநீர் கேட்டு நகராட்சியை நோக்கி வருகின்ற அவசியம் இருந்திருக்காது. குப்பை அள்ளுவதற்கு வாடகை டிராக்டர் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு வாடகை மட்டும் ரூ.6.40 லட்சம் வழங்கி உள்ளனர். இதற்கு பதிலாக புதிய டிராக்டாரே வாங்கி இருக்க லாம். நகராட்சி நிர்வாகத்திற்கு சொந் தமாக புதிய இயந்திரங்கள் வாங்கு வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண் டும் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி யின் உறுப்பினர்கள் முன்வைத்த னர்.