பயணிடம் தரக்குறைவாக பேசிய ஓட்டுநர் பேருந்தை சிறைபிடித்து போராட்டம்
நாமக்கல், டிச. 9- அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம் தரக்குறைவாக பேசிய அரசு பேருந்து ஓட்டுனரின் செயலை கண்டித்து, பெண்ணின் உறவினர்கள் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் அரசு போக்குவரத்து பணி மனை கட்டுப்பாட்டில் இயங்கும் திருச்சி துவங்கி சேலம் வரை செல்லும் அரசு பேருந்து திருச்சியில் இருந்து புறப்பட்டு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுனர் ரவிச் சந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் திங்களன்று காலை நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து ஆண்டகலூர் கேட் பகுதியில் இறங்கு வதற்கு ஏறிய இரண்டு பெண் பயணிகளிடம் ஓட்டுனர் ரவிச்சந்திரன் தரக்குறைவாக பேசியுள்ளதாக கூறப்படுகி றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்க ளது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரி வித்துள்ளனர். உடனே அப்பெண்ணின் கணவர் மற்றும் கண வரின் உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ராசிபுரம் ஆண்டகலூர் கேட் பகுதியில் பேருந்தை வழிமறித்து ஒரு மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் போலீசார் மற்றும் அரசு போக்கு வரத்து துறை அதிகாரிகள் பெண் பயணிடமும், அவர்க ளின் உறவினரிடமும்,சமாதானம் பேசினர். சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.
பாலக்கோடு நகரச் சாலை சீரமைத்திடுக
தருமபுரி, டிச. 9- குண்டும் குழியுமாக உள்ள பாலக்கோடு நகரச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி நகர நெடுஞ் சாலை சுமார் 4கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டும் குழியு மாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் உயிர் இழப்புகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இச்சாலையில் தினந்தோறும் பய ணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவ ரத்து நெரிசலில் சிக்குவது மட்டுமின்றி சாலையில் எழும் மண் துகள்களால் கண்களில் பட்டு வாகனங்கள் இயக்க முடியாத சூழல் உருவாகி வருகிறது. பாலக்கோடு பேருந்து நிலையத் திற்கு தினதோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் என சுமார் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் இருந்து ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெங்களூர், சென்னை மற்றும் தருமபுரி, சேலம், கோவை, பழனி, உள்ளிட்ட பகுதிக ளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. சாலை மிக மோசமாக உள்ளதால், வாகன நெரிசல், போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், அவசர கால ஊர்தி கள் செல்லுவதுகூட பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையை விரைவாக சீர மைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள் ளனர்.
அணைகள் நிலவரம் (திங்கட்கிழமை)
பவானிசாகர் அணை
நீர்மட்டம்: 98.90/105அடி
நீர்வரத்து: 1259 கனஅடி
நீர்திறப்பு: 2300 கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:140.90/160அடி
நீர்வரத்து:36.58கனஅடி
நீர்திறப்பு:405.33கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:68.12/72 அடி
நீர்வரத்து:758கனஅடி
நீர்திறப்பு:1097கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:112/120அடி
நீர்வரத்து:164கனஅடி
நீர்திறப்பு:546கனஅடி
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:46.53/60அடி
நீர்வரத்து:820கனஅடி
நீர்திறப்பு:748கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 88/90அடி
நீர்வரத்து:294கனஅடி
நீர்திறப்பு:325கனஅடி