சேலம், டிச.22- கல்வராயன் மலை பகுதியில் உள்ள உண்டு, உறைவிடப்பள்ளியில் உணவுப் பொருட்களை திருடிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கல்வராயன் மலை பகுதிகளில் உள்ள அரசு உண்டு, உறைவிட பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு உண்டு, உறைவிட பள்ளியில் உணவுப் பொருட்களை திருடிய தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். மலைவாழ் மாணவர்களுக்கு உடனடி யாக சாதி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். முதியோர் ஓய்வூதியம் மாதந்தோ றும் தாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் கல்வராயன் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கல் வராயன் மலைக்கமிட்டி செயலாளர் ஏ.பாக்ய ராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் எம்.கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பொன்னுசாமி பி.ஆர்.மாதேஸ்வரன், வி.சின்னமணி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.