districts

img

தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது

 உடுமலை, ஆக. 6- திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களுக்கு முன்  சந்தையில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி  ரூ. 1800வரை விற்பனையான நிலையில் தற் போது வரத்து அதிகரிப்பால் விலை பாதி யாக  குறைந்துள்ளது. உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதி யில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது.  ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் உரிய விலை கிடைக்காமல் இழப்பை சந்திக்கும் நிலையை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட் களுக்கு  முன் 14 கிலோ எடை கொண்ட பெட்டி  தக்காளி ரூ.1800 வரை விலை போனது. அத னால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், தற்பொழுது உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமாக இருப்பதால் தரத்தை பொறுத்து தக்காளி  பெட்டி ரூ.500 முதல் 900 வரை மட்டும் விற் பனை ஆகி வருகின்றது. இதனால், வெளிச் சந்தையில் தக்காளி விலை பாதியாக குறைந்தது. கடந்த ஒரு மாத காலமாக நூறு ரூபாயை கடந்து தக்காளி விற்பனை யான நிலையில், தற்போது பாதியாக குறைந் ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.