கோவை, நவ.5- சூலூரில் சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவியை விபத்திலிருந்து போக்கு வரத்துக் காவலர் காப்பாற்றிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், சூலூர் - திருச்சி சாலை மற்றும் கலங்கல் சாலை சந்திப்பில், காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந் நிலையில், செவ்வாயன்று காலை அப்பகுதி யில் செல்வகணேஷ் என்ற காவலர் வாகன போக்குவரத்தை ஒழுங்கு செய்துக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் லாரி வருவதை உணராத பள்ளி மாணவி ஒருவர் சாலையை வேகமாக கடக்க முயன்றுள்ளார். லாரி மாணவியின் மீது மோத செல்வதை கவனித்த போக்குவரத்து காவலர் செல்வ கணேஷ் துரிதமாக செயல்பட்டு மாணவியை சாலையில் இருந்து வெளியே இழுத்து அப் புறப்படுத்தினார். அதேவேளை லாரியின் ஓட்டுநரும் வேகத்தை கட்டுப்படுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்ப வம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி, அந்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின் றன.