ஈரோடு, ஜன.24- மாற்றுத்திறனாளி பெண் மீது பொய் வழக்கு புனையப்பட்டதாக தெரிவித்த நிலை யில், மாற்றுத்திறனாளிகள் சங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிடுவதாக அறி வித்த நிலையில், அதிகாரிகளின் வருத்தம் மற்றும் விளக்கத்தை ஏற்று முற்றுகை போராட்டம் ரத்து செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 24 அன்று கோபியில் வரு வாய் கோட்டாட்சியர் தலைமையிலான குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க அந்தியூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி எம்.பூரணம் வந்தி ருந்தார். அன்றைய தினம் ஒருவர் நகையைக் காணவில்லை என கோபி காவல் நிலையத் தில் புகார் தெரிவித்துள்ளார். அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பூர ணம் நகையை எடுத்திருக்கலாம் எனக் கருதி கடந்த 21ஆம் தேதி காவல் நிலையம் அழைத் துச் சென்றனர். அங்குகாவல் துறையினரின் விசாரணை முறைகள் சட்டத்தை மீறியதாக வும், மனித உரிமைகளை மீறியதாகவும் இருந்தது. ஊனத்தைச் சொல்லியும் கொச் சைப்படுத்தியுள்ளனர். அப்போது தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் சங்கத்தின் நிர்வாகிகள் அழைப்பையும் காவல் துறையினர் ஏற்க வில்லை. இந்த அச்சுறுத்தலால் நிலை குலைந்து போன பூரணம் உளவியல் ரீதி யாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். காவல்துறையின் அராஜகமான நடவடிக் கைக்கு ஆட்சேபனை தெரிவித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோபி காவல் நிலையத்தில் வரும் 25ஆம் தேதி குடியேறும் போராட்டம் அறிவிக்கப் பட்டது. இதுகுறித்து வெள்ளியன்று கோபி காவல் துணை கண்காணிப்பாளர் பேச்சு வார்த்தை நடத்தினார். காவல் துறையின ரின் விசாரணை முறைகள் குறித்து சங்கம் ஆட்சேபனைகளை முன் வைத்தது. நடை பெற்ற விசாரணை குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதுடன், தங்களுடைய நடவடிக்கை பூரணத்திற்கு சங் கடங்களை உருவாக்கி இருந்தால் அதற் காக வருத்தம் தெரிவிப்பதாகவும், மேலும் சம்பந்தப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய் யப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி னர். இதனை ஏற்று போராட்டத்தை ரத்து செய்தனர். முன்னதாக இந்த பேச்சுவார்த்தையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சாவித்திரி, செயலாளர் ப.மாரிமுத்து, பொருளாளர் வீ.ராஜு, முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.சுப்பிரமணி, மாவட்ட உதவி செயலாளர் ஆர்.ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் மார சாமி மற்றும் அந்தியூர் தாலுகா செயலா ளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.