தருமபுரி, ஜூலை 5– அரசின் நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தருமபுரியில் அரசு அலு வலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடு பட்ட மாற்றுதிறனாளிகளை காவல்துறையி னர் அராஜக முறையில் குண்டுக்கட்டாக தூக்கிசென்று கைது செய்த சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் சார்பில் தருமபுரியில் குடியேரும் போராட்டம் நடைபெற்றது. இச் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ஜி.கரூ ரான் தலைமை தாங்கினார். இதில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் எஸ்.நம்புராஜன், மாவட்ட பொறுப் பாளர் எம்.மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் ஜி.தமிழ்செல்வி உள்ளிட்ட தலைவர்கள் பங் கேற்றனர். இப்போராட்டத்தில், தமிழ்நாடு வருவாய் ஆணையர் உத்தரவுபடி மாதாந்திர குறைதீர் கூட்டங்கள் மாவட்ட அளவிலும், ஆர்டிஓ அள விலும் முறையாக நடத்திட வேண்டும். மாற் றுத்திறனாளிகள் அலுவலகத்தால் நடத்தப் படும் முகாம்களிலேயே அனைத்து அடை யாள சான்றிதழ்களும், பயணச்சலுகை சான்றிதழ்களும், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைந்து வழங்க அனைத்து அதிகாரிகளை வைத்து முகாம் நடத்த வேண்டும். அரசு சலுகைகள், நலத்திட் டங்களில் வங்கி கடனில் மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அரசுதுறை மற்றும் தனியார் துறையில் 5 விழுக்காடு இடஓதுக்கீடு வழங்குவதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாற் றுத்திறனாளிகளின் சங்கத்தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல், திடீரென போலீ சார் கைது நடவடிக்கையை மேற்கொண்ட னர்.
சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளை அரஜாக முறையில் குண்டுகட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். முதலில் கைது செய்தவர்களை ஒரு தனியார் திருமண மண் டபத்தில் அடைத்தனர். அங்கும் உள்ளிருப்பு போராட்டத்தில் மாற்றுதிறனாளிகள் சங்கத்தி னர் ஈடுபட்டனர். ஒரு பகுதி கைது செய்யா தவர்களை சிறைபடுத்தாமல் காவல்துறை வாகனத்தில் வைத்துக்கொண்டே அலை கழித்தனர். மதிய உணவு நேரம் தான்டியும் உணவு கொடுக்காததால் மாற்றுத்திறனா ளிகள் சிலர் மயக்கமடைந்தனர். இதன்பின் திருமண மண்டபத்தில் இருந் தவர்களை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி பேருந்து நிலையத்தில் கொண்டு சென்று வெளியேறுமாறு நிர்பந்தித்தனர். இருப்பி னும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலை வர்கள் போராட்டத்தில் உறுதியாக நின்றனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு நடத்த ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற் படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். மாற்றுத்திறனா ளிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட தருமபுரி காவல்துறையினரின் நடவடிக்கை களை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிய டைந்தனர்.